Skip to main content

அமைச்சர் சீனிவாசனை எதிர்த்து ஐ.பி.எஸ் போட்டியா? சூடுபிடிக்கும் திண்டுக்கல் தொகுதி!!

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

Dindigul I P Senthilkumar have to compete with dindigul seenivasan

 

தமிழகத்தில் வருகிற 2021ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அரசியல் களம் சூடுபிடித்துவருவதால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய ஆளும் கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் இப்போதே தொகுதிகளை தக்கவைத்துக் கொள்வதற்காக வளம்வந்து கொண்டிருக்கிறார்கள்.


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிதான் சின்ன தொகுதியாக உள்ளது. அதாவது 48 வார்டுகளைக் கொண்ட மாநகராட்சியாகவும் 9 ஊராட்சிகளைக் கொண்ட ஒன்றியமாகவும் திண்டுக்கல் செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில்தான் கடந்த தேர்தலில் சீனிவாசன் முதன்முதலில் போட்டியிட்டு 22 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதன்மூலம், சீனிவாசனுக்கு வனத்துறை அமைச்சர் பதவியை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்தார்.

 

அதைத் தொடர்ந்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.க்கு விசுவாசமாக இருந்துவரும் சீனிவாசன், வாக்களித்த மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில், நகரம் முதல் பட்டித் தொட்டிகள் வரை, தார் ரோடு, சிமெண்ட் ரோடு, சாக்கடை, நாடகமேடை, பயணிகள் நிழற்குடை, குடிநீர், மின்சாரம் மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா போன்ற அனைத்து வசதிகளையும் தனது நிதி மூலமும் பொது நிதி மூலமும் பலகோடிக்குச் செய்து, மக்கள் மத்தியில் எந்த ஒரு கெட்டப் பெயரும் இல்லாமல் இருந்துவருகிறார். சீனிவாசன்தான் மீண்டும், தொகுதியைத் தக்கவைக்க களம் இறங்க இருக்கிறார். 

 

Dindigul I P Senthilkumar have to compete with dindigul seenivasan


அதுபோல், எதிர்க் கட்சியிலுள்ள தி.மு.க கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியான சி.பி.எம் மூன்று முறை இத்தொகுதியைத் தக்கவைத்ததன் மூலம், தொடர்ந்து பாலபாரதி எம்.எல்.ஏ.வாக இருந்திருப்பதால், மீண்டும் இத்தொகுதியை எங்களுக்குத்தான் கொடுக்க வேண்டும் என சி.பி.எம் கட்சியினர் தீவிரமாகக் கேட்டு வருகிறார்கள். அதோடு புது வாக்காளர்கள் சேர்க்கும் பணியிலும் களம் இறங்கி வருகிறார்கள். இருந்தாலும் மாவட்டத்தின் தலை நகரான இத்தொகுதியை கூட்டணிக்கு கொடுக்கக் கூடாது தி.மு.க.தான் போட்டிப்போட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலினிடமும், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடமும், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமாரிடமும் உ.பி.கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

 

கடந்த நான்கரை வருடங்களாக, எங்கள் அமைச்சர் சீனிவாசன் தொகுதி மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து கொடுத்திருக்கிறார். அதோடு தொகுதியில் உள்ள கட்சிக்காரர்கள் மற்றும் பொதுமக்களின் வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதிலும் கலந்துகொண்டு வருகிறார். கரோனா நிவாரண உதவியாக, தொகுதியில் உள்ள 1 லட்சத்து 15 ஆயிரம் ரேஷன் கார்டுக்கு, 5 கிலோ அரிசியும், பலசரக்குப் பொருட்களையும் அமைச்சர் சீனிவாசனும் அவருடைய மகன்களான ராஜ்மோகன், வெங்கடேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் நேரடியாகவே மக்களைச் சந்தித்துக் கொடுத்ததன் மூலம், மக்கள் மத்தியிலும் நல்ல பெயர் எடுத்திருக்கிறார். 


மாநரில் உள்ள 48 வார்டுகளை, நான்கு பகுதியாகப் பிரித்து, 12 வார்டுக்கு ஒரு பகுதிச் செயலாளர் என நான்கு பகுதிச் செயலாளர்களை நியமித்து இருப்பதன் மூலம், கட்சிப் பணிகள் தொய்வில்லாமல் இருந்துவருகிறது. இதேபோல் ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து, மேற்கு ஒன்றியச் செயலாளராக அமைச்சர் சீனிவாசனின் தம்பி மகனான ராஜசேகரனை நியமித்ததின் பேரில், கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டிக்கொண்டு மக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துகொண்டு கட்சியைப் பலப்படுத்தி வருகிறார்.

 

தற்போது புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியில்கூட அமைச்சர் மகனான ராஜ்மோகன் டவுன் பகுதிகளையும், ராஜசேகர் ஒன்றியப் பகுதிகளிலும் உறுப்பினர்களைச் சேர்த்து வருவதால், நகரம் முதல் ஒன்றியம் வரை கட்சியும் வலுவாக இருக்கிறது. அதனால், எங்கள் அமைச்சர் சீனிவாசனை எதிர்த்து தி.மு.க.வில் ஐ.பி.செந்தில்குமார் போட்டி போட்டாலும் சரி அல்லது கூட்டணிக் கட்சியான சி.பி.எம் போட்டி போட்டாலும் சரி, வெற்றி பெற முடியாது. அந்தளவுக்கு இத்தொகுதியை அ.தி.மு.க கோட்டையாக உருவாக்கியிருக்கிறோம் என்றனர் ஒன்றியப் பொறுப்பில் உள்ள சில ர.ர.க்கள் 

 

Dindigul I P Senthilkumar have to compete with dindigul seenivasan


இது சம்பந்தமாக மாநகரப் பொறுப்பில் உள்ள உ.பி.கள் சிலரிடம் கேட்ட போது, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் 4 சட்டமன்றத் தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியதன் மூலம், திண்டுக்கல் மாவட்டம் தி.மு.க கோட்டையாக இருந்துவருகிறது. மாவட்டத்தின் தலைநகரமான திண்டுக்கல் தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காகத் தான், கடந்த மாதம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நகரச் செயலாளர் ராஜப்பாவும், ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியனும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்கவேண்டும். அதிலும், வேட்பாளராக மாவட்டச் செயலாளரான ஐ.பி.செந்தில்குமாரை வேட்பாளராகப் போட்டால்தான் வெற்றி பெற முடியும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். 

 

dmk

 

ஐ.பி.செந்தில்குமார், பழனி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பதால் அந்தத் தொகுதியை விட்டுவிட்டு, இங்கே போட்டிபோட வேண்டும் என்று எங்களைப்போல் உள்ள கட்சிப் பொறுப்பாளர்களும் விரும்புகிறார்கள். இத்தொகுதியைப் பொருத்தவரை ஒன்றியம்தான் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும். அதையும் கடந்த உள்ளாட்சித் தேர்தல் மூலம் உடைத்து தி.மு.க.வுக்கு சாதகமாக கொண்டுவந்ததுடன் மட்டுமல்லாமல், யூனியனையும் கைப்பற்றி இருக்கிறோம்.

 

cnc

 

அதுபோல், ஐ.பி அமைச்சராக இருந்தபோது, தொகுதிக்கு குடிநீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்ததின்மூலம் நகர மக்கள் மனதில் இடம் பிடித்தார். கட்சியும் வளர்ந்தது. மாநகரில் முன்னாள் நகர்மன்றத் தலைவர்களான பசீர் அகமது மற்றும் நடராஜன் ஆகியோர் நகரப் பொறுப்பாளர்களாக இருந்தபோது, கட்சி வளர்ச்சியும் வலுவாக இருந்தது. அதன்பின், நகரச் செயலாளராக ராஜப்பாவை நியமித்ததன் பேரிலும் கட்சி வளர்ச்சிக்குப் பாடுபட்டுவருகிறார். ஆளும் கட்சிபோல் தி.மு.கவிலும் 48 வார்டுகளை நான்கு பகுதிகளாகப் பிரித்து, கட்சிப் பொறுப்பாளர்களை உடனடியாக நியமித்து கட்சியைப் பலப்படுத்த எங்கள் முன்னாள் அமைச்சர் ஐ.பி.யும், மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அதன் மூலம்தான் வரும் தேர்தலில் அமைச்சர் சீனிவாசனை எதிர்த்து ஐ.பி.செந்தில்குமார், போட்டியிடுவதன் மூலம் வெற்றி பெறமுடியும் என்று கூறினார்கள்.

 

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் களமூம் சூடுபிடித்துவருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.