Skip to main content

பத்தரைக்கு வைக்கிறான், பதினொன்ரைக்கு எடுக்குறான், மூன்ரைக்கு வைக்கிறான், திரும்ப நால்ரைக்கு எடுக்குறான்... லியோனி

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

 

சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் லியோனி கலந்து கொண்டு பேசினார்.
 

அப்போது அவர், ஜெயலலிதா புகைப்படம் சட்டமன்றத்தில் வைக்கக்கூடாது. ஜெயலிதாவுக்கு மணிமண்டம் கட்டினால் கோர்ட்டுக்கு சென்று அதனை அற்புறப்படுத்துவோம் என்று சொன்னவர் யார் தெரியுமா? பாமக தலைவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ். அவர்கள் விருந்து வைக்கிறார்கள் என்ற உடனே தைலாபுரத்திற்கு செல்கிறார்கள் பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்.  
 

நரேந்திர மோடி பேச்சு எப்படி இருக்கும் என்று தெரியுமா? வாயில் இருந்து தேன் ஊருகிற மாதிரி இருக்கும். ஆனால் ஊறாது. ரவையே இல்லாமல் வாயில உப்புமா கிண்டுற ஆளு யாருன்னு கேட்டா அவருதான். எப்படித்தான் அந்த கலையை அவர் கத்துக்கிட்டாருன்னு தெரியல. இன்றைக்கு (நேற்று) சென்னையில நடக்கிற மாநாட்டில் அப்படித்தான் விவசாயிகளுக்கு நிறைய செய்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார்.


 

bjp-admk


அந்தக் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகிறார். நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட  10 கோரிக்கையை மோடி முன்பு வைக்கிறார். அதற்கு பதில் சொல்லியிருக்க வேண்டுமல்லவா நரேந்திர மோடி. ராமதாஸ் பேசுவதை கேட்டுவிட்டு பின்னர் பேசிய மோடி, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்கிறார். அதையா நாங்க கேட்டோம். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டாரா பதில் சொன்னாரா? ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டார்களே அதற்கு பதில் சொன்னாரா? மேகதாது அணை விவகாரத்திற்கு பதில் சொன்னாரா? 

 

Dindigul I. Leoni


 

மோடி வந்து சென்ற பிறகு துரைமுருகனை தொடர்புகொண்ட தேமுதிக சுதீஷ், திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறோம் என்கிறார். சீட் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை என்று சொன்ன பிறகும், எப்படியாவது கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இந்த முடிவை எடுக்க வேண்டியது எங்கள் தலைவர்தான் என்று கூறிவிட்டார் துரைமுருகன். திமுக தெளிவாக உள்ளது.
 

திருமண வீட்டில் விருந்து ஒழுங்கா வைக்கலன்னா நாற்காலி, டேபிளெல்லாம் பறக்குமே அந்த மாதிரி, மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்த் படத்தை காலையில் பத்தரை மணிக்கு வைக்கிறான், பதினொன்ரை மணிக்கு எடுக்குறான், திருப்பி மூன்ரைக்கு வைக்கிறான், நால்ரைக்கு எடுக்குறான். இப்படியே எடுத்தெடுத்து திரும்ப வைச்சி, பின்னர் ஆறரை மணிக்கு வைத்து, மோடி சென்ற பிறகு எடுக்கிறார்கள். அதன்பிறகு தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பியூஸ்கோயல், இபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனை. மோடி சொல்கிறார் தேசிய ஜனநாயக கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி. போட்டோ வைக்க, எடுக்க, வைக்க எடுக்க இதற்கு பெயர்தான் கூட்டணியா? 
 

யாருமே கூட்டணிக்கு வரவில்லை என்றவுடன், பாமக வந்தவுடன் உடனே 7 தொகுதிகளை கொடுத்துவிட்டு, இப்போது தேமுதிகவுக்கு கொடுக்க தொகுதிகள் இல்லாமல் முழிக்கிறது அதிமுக. இவ்வாறு பேசினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.