Skip to main content

தினகரன் அதிரடி பதில்..! சீட் வேண்டாம் என ஓட்டம் பிடிக்கும் அமமுக நிர்வாகிகள்..!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

Dinakaran  Response  Amukha executives who don't interested to consent in election


தமிழக சட்டமன்றத்துக்கு நடைபெறும் 16வது பொதுத்தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அதன்படி அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இன்னும் பல தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்காமல் வைத்துள்ளது. ‘அதற்கு காரணம் வேறு சில கட்சிகள் கூட்டணிக்கு வருகின்றன, அவை வந்தபின் அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கியது போக மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்’ என தினகரன் தரப்பில் கூறுகின்றனர்.

 

ஆனால், உண்மைக் காரணம் வேறு என்கிறார்கள் அமமுக மாநில நிர்வாகிகள். இதுபற்றி அவர்களிடம் நாம் பேசியபோது, சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் அதிமுகவுடன் எப்படியும் இணைந்துவிடுவோம் என்கிற நம்பிக்கையில் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், சசிகலா துறவறம் என அறிவித்த பின் இங்குள்ள பலருக்கும் ஒருவித விரக்தி ஏற்பட்டது. அதேபோல் சீட் வேண்டும் என மனு தந்தவர்களுக்கு நீங்கள்தான் உங்கள் சொந்த பணத்தை வைத்து தொகுதிக்கான செலவை செய்ய வேண்டும். கட்சி எந்தவிதமான நிதியும் தராது எனக் கூறியுள்ளனர். இதனால் பலரும் எங்களுக்கு சீட் வேண்டாம் என ஒதுங்கி போகின்றனர். 

 

உதாரணத்திற்கு, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பாலசுப்பிரமணியன். அதிமுக பிரிந்து அமமுக உருவானபோது தினகரன் பின்னால் சென்றதால், தனது எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிட்டது. 2019இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டது. அவர் தோல்வியைச் சந்தித்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் சீட் வழங்க தினகரன் முடிவு செய்துள்ளார். ஆனால், பாலசுப்பிரமணி தனக்கு வேண்டாம், தொகுதிக்கு செலவு செய்ய தன்னிடம் பணம் இல்லை என கூறுவதாக தெரிகிறது.

 

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தொகுதியில் அமமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்திபன் அறிவிக்கப்பட்டுள்ளார். தன்னிடம் செலவு செய்ய நிதி இல்லை என தேர்தல் வேலையில் சுணக்கமாக உள்ளதாக அமமுகவினர் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.