Skip to main content

“வாக்கு வித்தியாசம் மிகப்பெரிய அளவில் இல்லை” - பாஜக துணைத் தலைவர் நாராயண் திருப்பதி

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

"The difference in votes is not huge" - BJP Vice President Narayan Tirupati

 

குஜராத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மீண்டும் 7 ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் இன்று தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது அதேபோல் இமாச்சலிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தோல்வி அடைந்ததற்கான காரணத்தை பாஜக ஆராயும்” எனக் கூறினார்.

 

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து குஜராத்தில் பாஜக மண்ணைக் கவ்வும் என்றும் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்றும் சொன்னார்கள். ஆனால் மண்ணைக் கவ்வியது அவர்கள்தான். இமாச்சல பிரதேசத்தில் மிகச்சிறப்பாக வெற்றி பெற்றிருக்க வேண்டும். வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் என்பது மிகப்பெரிய அளவில் இல்லை.

 

கடந்த 3 மாதங்களாக குஜராத் தேர்தல் குறித்து திராவிட கட்சிகள் என்ன சொன்னார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். தொடர்ந்து பாஜக தோல்வி அடையும் எனச் சொன்னார்கள் இதற்காகத்தான் குஜராத்தில் கிடைத்த வெற்றி மாபெரும் வெற்றி எனச் சொன்னோம்” என்றார். குஜராத்தில் பாஜக பெற்றுள்ள வெற்றி குறித்து அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை எனச் செய்தியாளர்களின் கேள்விக்கு, “ஏனெனில் மிக முக்கிய கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொண்டு உள்ளார். நானும் நரேந்திரனும் துணைத்தலைவர் என்ற அடிப்படையில் கட்சியின் சார்பில் அண்ணாமலைக்காக செய்தியாளர்களைச் சந்திக்கிறோம். 

 

இமாச்சலில் ஏற்பட்ட தோல்வியை இமாச்சல் பாஜகவும் அகில இந்திய பாஜக தலைவர்களும் விவாதிப்பார்கள். காரணங்களை ஆராய்வார்கள். விவசாயிகளைக் கண்டுகொள்ளவில்லை என்பதற்காக 1% ஓட்டு வித்தியாசம் வருமா? அதனால் இல்லை. ஒரே ஒரு விஷயம் தான் காரணம் என்று சொல்ல முடியாது. இச்சிறு பின்னடைவைக்  கட்சி ஆராயும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.