Skip to main content

கல்வித் துறை தொடர்ந்து குழப்பத்துறை தான்... -அமைச்சர் முன்பு ர.ர.க்கள்

Published on 12/07/2020 | Edited on 12/07/2020
sengottaiyan minister

 

மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு சென்று படிப்பது என்பது இப்போது யாருமே முடிவெடுக்க முடியாது என்று அந்த துறையின் அமைச்சரான செங்கோட்டையன் கூறியிருக்கிறார். 

 

ஈரோட்டில் சனிக்கிழமை காவலர் உணவகத்தை திறந்து வைத்து விட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், "வருகிற 17 ஆம் தேதி நமது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோட்டுக்கு வருகிறார். அன்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் முடிக்கப்பட்ட திட்ட பணிகளை திறந்துவைக்கிறார். மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லும்  நாட்டுகிறார். ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வும் செய்கிறார்" என கூறியவர் தொடர்ந்து பேசுகையில், "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள்  வழங்கும் பணியை வருகிற 14 ஆம் தேதி  முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு புத்தகப்பையுடன் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்படும். அதனை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆலோசனைகள்  நடைபெற்று வருகிறது. பிளஸ்2 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணி தொடங்க உள்ளது. மடிக்கணினியில் பிரத்யேக செயலி மூலம் கற்பித்தல் பணி நடைபெறும். இதனையும் முதல்வர் வருகிற 14 ஆம் தேதி தொடங்கிவைக்கிறார்.    

 

பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து, இதற்காக அமைகப்பட்ட குழுவின்  அறிக்கை வந்த பிறகுதான் மேலும் முதல்வரின் ஆலோசனை பெற்று முடிவு மேற்கொள்ளப்படும்.பள்ளிகள் திறப்பு குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை. கல்வி கட்டடணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளில் தனியார் பள்ளிகள் அனுமதிப்பதில்லை என்ற கேள்விகளுக்கு ஓரிரு நாள்களில் இதற்கான வரைமுறைகள் அறிவிக்கப்படும்.    தொலைக்காட்சியில்  ஒரே நேரத்தில் அனைத்து வகுப்புகளும் நடைபெறாது.  முறைப்படி கால அட்டவணைப்படி தொலைக்காட்சிகளில் வகுப்புகள் நடத்தப்படும். இதனால் ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள்  இருந்தாலும் எந்த சிக்கலும் ஏற்படாது." என்றார்.    


   
கல்வித்துறை தொடர்ந்து குழப்பத்துறையாகவே நீடிக்கிறது என அமைச்சர் செங்கோட்டையன் முன்பே  ர.ர.க்கள் கூறுகிறார்கள்.

 

 


.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.