Skip to main content

என்கவுண்டர் எடப்பாடியை கண்டித்து 28ல் தேமுதிக ஆர்ப்பாட்டம் - தமிழகமெங்கும் பங்கேற்போர் விவரம் 

Published on 26/05/2018 | Edited on 26/05/2018
vijayakanth

 

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தேமுதி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  இதில் பங்கேற்போர் விபரம் குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவனத் தலைவர், கழக பொதுச்செயலாளர்  விஜயகாந்த் அறிவிப்பு:

 

’’தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி வாழும் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொழுது பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய என்கவுண்டர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் 28.05.2018 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்டமாக ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


  
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்கள் விவரம்:

பிரேமலதா விஜயகாந்த்    -காஞ்சிபுரம் மாவட்டம், அழகாபுரம்.ஆர்.மோகன்ராஜ்,Ex:MLA கழக அவைத்தலைவர்    - சென்னை மாவட்டம், எல்.கே.சுதீஷ் கழக துணை செயலாளர்    - திருவள்ளூர் மாவட்டம்,  ப.பார்த்தசாரதி,Ex:MLA,  கழக துணை செயலாளர்    - திருவண்ணாமலை மாவட்டம், .ஏ.எஸ்.அக்பர் கழக துணை செயலாளர் -    ஈரோடு மாவட்டம், பேராசிரியர்.எஸ்.சந்திரா கழக துணை செயலாளர்    - தேனீ மாவட்டம், எம்.ஆர்.பன்னீர் செல்வம் கழக வழக்கறிஞர் அணி செயலாளர் /  கழக உயர்மட்ட குழு உறுப்பினர் -    புதுக்கோட்டை மாவட்டம், 

 

பி.கிருஷ்ணமூர்த்தி கழக உயர்மட்டகுழு உறுப்பினர் -    வேலூர் மாவட்டம், ஜெ.பாலன் கழக உயர்மட்டகுழு உறுப்பினர் -    சிவகங்கை மாவட்டம், செல்வ.அன்புராஜ் கழக கேப்டன் மன்ற செயலாளர் -    திண்டுக்கல் மாவட்டம், P.ராஜாசந்திரசேகர் கழக கேப்டன் மன்ற துணை செயலாளர்    -  அரியலூர் மாவட்டம், கே.ஏ.சுல்தான்பாஷா
கழக கேப்டன் மன்ற துணை செயலாளர் -    பெரம்பலூர் மாவட்டம், ஈ.எம்.பொன்னுசாமி கழக கேப்டன் மன்ற துணை செயலாளர் -    நீலகிரி மாவட்டம் கு.நல்லதம்பி,E                x:MLA.,கழக இளைஞர் அணி துணை செயலாளர்    - கிருஷ்ணகிரி மாவட்டம், 

 

மாலதி வினோத் கழக மகளிர் அணி செயலாளர்-    நாமக்கல் மாவட்டம், சுபமங்கள டில்லிபாபு கழக மகளிர் அணி துணை செயலாளர்    - கடலூர் மாவட்டம், பா.ஜான்சிராணி கழக மகளிர் அணி துணை செயலாளர்    - திருநேல்வேலி மாவட்டம், ஏ.எம்.ஜி.விஜயகுமார் கழக மாணவர் அணி செயலாளர் -    நாகப்பட்டினம் மாவட்டம், எஸ்.கணேசன் கழக தொண்டர் அணி செயலாளர்    - விழுப்புரம் மாவட்டம், எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன் கழக வர்த்தக அணி செயலாளர்-    தருமபுரி மாவட்டம்,

 

டாக்டர்.ப.இராமநாதன் கழக மருத்துவர் அணி செயலாளர்    -கரூர் மாவட்டம், .கோதை.எஸ்.மாரியப்பன் கழக நெசவாளர் அணி துணை செயலாளர் -    இராமநாதபுரம் மாவட்டம், எம்.வி.எஸ்.இராஜேந்திரநாத் கழக கலை-இலக்கிய அணி துணை செயலாளர்    - மதுரை மாவட்டம், சிங்கை.கே.சந்துரு கழக கலை-இலக்கிய அணி துணை செயலாளர்    - திருப்பூர் மாவட்டம், ஜி.காளிராஜன் தொழிற்சங்க பேரவை செயலாளர்-    தஞ்சாவூர் மாவட்டம், எஸ்.முஜிபூர் ரஹ்மான் தொழிற்சங்க பேரவை பொருளாளர்    - திருச்சி மாவட்டம், 

 

டி.கே.விஜய் வெங்கடேஷ் தொழிற்சங்க பேரவை துணை தலைவர்- கன்னியாக்குமரி மாவட்டம், எஸ்.மாதவன் தொழிற்சங்க பேரவை துணை தலைவர் - திருவாரூர் மாவட்டம்,  பி.வேணுராம் தொழிற்சங்க பேரவை துணை செயலாளர்    - கோவை மாவட்டம்,  தா.ஆதிளிங்கபெருமாள் தொழிற்சங்க பேரவை துணை செயலாளர்-    விருதுநகர் மாவட்டம், ஆர்.உமாநாத் முன்னாள் கழக துணை செயலாளர்-    சேலம் மாவட்டம்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாக்காளர்கள் கவனத்திற்கு...” - சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.32 கோடி ஆகும். இதில் முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். 80 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் ஆவர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடியும், திருநர் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் (65 சதவிகிதம்) வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்கள் வாக்களிக்கலாம். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 950 ஆகும். இதில் ஆண் வேட்பாளர்கள் 874 பேரும், பெண் வேட்பாளர்கள் 76 பேரும் ஆவர்.

வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லலாம். ஆனால் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 வகையான அரசு ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முதல்கட்ட வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
First Phase Voting; Preparations are intense

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தின் 950 வேட்பாளர்கள் உள்பட 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த முதல் கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, கிரன் ரிஜிஜு, எல். முருகன், ஜிதேந்திர சிங், சர்வானந்த் சோனோவால், அர்ஜுன்ராம் மேக்வால் மற்றும் சஞ்சீவ் பல்யான் என 8 பேர் போட்டியில் உள்ளனர். தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும், புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் களத்தில் உள்ளார். மேலும் திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேவ், அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துகி, தமிழகத்தின் முன்னாள முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதே சமயம் முதற்கட்ட தேர்தலுடன் தமிழகத்தின் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது. இதே போன்று திரிபுரா மாநிலம் ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பதற்றமான 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பதற்றமான 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளில் நவீன ஆயுதங்களுடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியும் தீவிரமடைந்துள்ளது.