புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிகீரமங்கலம்வேம்பங்குடிமேற்கு கைப்பந்து கழகத்தின் சார்பில் 3 நாட்கள் நடக்கும் மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கைப்பந்துப் போட்டியை அமைச்சர்கள்ரகுபதி,மெய்யநாதன்முன்னிலையில்தயாநிதி மாறன்எம்.பி. தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்துதயாநிதி மாறன்எம்.பி, செய்தியாளர்களிடம் பேசும் போது, “திமுகவினர் மீதும் பொய்யானவழக்குகளைப்போடுவதைவாடிக்கையாகப்பலர் கொண்டுள்ளனர். கலகம் இழுக்க வேண்டும் என்று என்று சிலர் செயல்படுகின்றனர். அதைச்சட்ட ரீதியில் சந்தித்து நாங்கள் வெற்றி பெறுகிறோம். அதன் அடிப்படையில்தான் இன்றைய நீதிமன்ற தீர்ப்பும் அமைந்துள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இந்தியாவிலேயே முதல் குரலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் உயர்ந்துள்ளது. பாஜக தீய எண்ணத்தோடு இந்தியாவை இந்தி பேசும் மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு ஆள வேண்டும்எனத்துடிக்கின்றனர். அதற்கு முதல் எதிர்ப்புக் குரல்தமிழகத்தில் இருந்துஒலித்துள்ளது. இதனைத் தொடர்ந்துஆதரவாகத்தென் மாநில குரல்களும் வந்துள்ளது. இந்த நிலைப்பாட்டில் தமிழக முதல்வர் நிச்சயம் வெற்றி பெறுவார். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான் உள்ளது. தமிழும், ஆங்கிலமும் படித்த எங்களது பிள்ளைகள் சிறப்பான முறையில் சாதனை படைத்து வருகின்றனர். கூகுள் நிறுவனத் தலைவரே இரு மொழி தான் படித்தவர் தான்.
வடநாட்டவர்கள்ஏன் மும்மொழி படிப்பதில்லை. எங்கள் பிள்ளைகள் மட்டும் மும்மொழி படிக்க வேண்டுமா..?. இந்த விவகாரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் கேலி செய்கிறார். தென்னிந்தியஎல்லையைத்தாண்டினால் சோறு சாப்பிட முடியாதுஎனக்கூறுகிறார். தேவை என்றால் அவர்கள் ஆங்கிலம் படிக்கட்டும்.எங்களுக்குத்தேவை என்றால் நாங்கள் எந்த மொழியையும்படிக்கத்தயார். கிரிக்கெட்டில் ஒரு சமூகத்தின் ஆதிக்கம் உள்ளதா இல்லையா என்பதை, இந்தியாவிற்காக யாரெல்லாம் விளையாடுகிறார்கள் தமிழகத்திற்காக யாரெல்லாம் விளையாடுகிறார்கள் என்ற பெயரைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளலாம்” என்றார்.