அமெரிக்காவிற்குப் பல்வேறு மேற்படிப்புகளுக்காகச் சென்றுள்ள மாணவர்களின் விசா காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார் திமுக எம்.பி. தயாநிதி மாறன்.
மேற்படிப்புகளுக்காக ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் அமெரிக்காவுக்குச்செல்கின்றனர். இதில் தமிழக மாணவ- மாணவிகளும் அடங்குவர். இவர்களுக்கு எஃப்-1 மற்றும் எம்-1 விசாக்களை வழங்குகிறது அமெரிக்க அரசாங்கம்.
இந்த நிலையில், அந்த விசாக்களின் காலம் முடிந்துள்ள நிலையில் அதனை நீட்டிக்க மறுத்து வருகிறது அமெரிக்கா. இதனால், ஆயிரக்கான மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் நலன் கருதி, அவர்களின் விசா காலத்தை நீட்டிக்க அமெரிக்க அரசாங்கத்தை வலியுறுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள தனது கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் தயாநிதிமாறன் எம்.பி. !