Skip to main content

தயாநிதிமாறன் தோல்வி பயத்தால் அவதூறுகளை பரப்புகிறார்: எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

 

மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் தோல்வி பயத்தால் எஸ்.டி.பி.ஐ. கட்சி மீது அவதூறுகளை பரப்பி வருகின்றார் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;

 

Dayanidhi Maran



நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி, மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகின்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளராக கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி பரிசு பெட்டகம் சின்னத்தில் போட்டியிடுகின்றார். தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் மக்கள் பிரச்சினைகள் குறித்தும், தொகுதியின் அடிப்படை பிரச்சினைகளை நிறைவேற்றுவது குறித்தும் தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி பிரச்சாரங்களை வீரியமாக செய்துகொண்டிருக்கிறது.
 

அதுமட்டுமின்றி 50க்கும் மேற்பட்ட அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
 

கடந்தகாலங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மேற்கொண்ட மக்கள் பணிகள் மூலமும் தமிழக உரிமைகள் சார்ந்த போராட்டங்கள் மூலமும் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் மூலமும் தொகுதி மக்களுக்கு நன்கு பரிட்சயமான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர் தெஹ்லான் பாகவிக்கு பெருகிவரும் ஆதரவால், எதிர்த்து போட்டியிடும் அனைத்து கட்சிகளும் கலக்கமடைந்துள்ளன.

 

குறிப்பாக இரண்டு முறை மத்திய சென்னை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்காத, பல்வேறு முறைகேடு வழக்குகளில் சிக்கி விசாரணையை எதிர்கொண்டுவரும் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் தோல்வி பயத்தால் எஸ்.டி.பி.ஐ. கட்சி மீது அவதூறுகளை பரப்பி வருகின்றார்.


 

sdpi



அமமுக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வீரியமான தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிட்டு தடுத்தும், பிரச்சாரத்துக்கு செல்லும் பெண்களை தாக்கியும், தரக்குறைவாக விமர்சித்தும் தனது அரசியல் அராஜக போக்கை திமுக கட்டவிழ்த்துவிட்டு வருகின்றது. இதற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. கட்சி சட்டரீதியான போராட்டங்களை மேற்கொள்ளும் வேளையில், எஸ்.டி.பி.ஐ. கட்சி வாக்கிற்கு பணம் கொடுப்பதாகவும், அதனை திமுகவினர் தடுப்பதாகவும் அவதூறுகளை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் மேற்கொண்டு வருகின்றார். தனது ஆதரவு ஊடகங்கள் மூலமும் அந்த தவறான பிரச்சாரத்தை செய்து வருகின்றார். இத்தகைய அவதூறு பிரச்சாரத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.  

 

எஸ்.டி.பி.ஐ. கட்சி குறித்து மக்கள் நன்கறிவார்கள். கடந்த காலத்தில் இதே மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் வெற்றிக்காக தயாநிதிமாறன் மேற்கொண்ட வன்முறை தாக்குதல்களையும் மக்கள் அறிவார்கள். தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று தன் மீதான வழக்கின் விசாரணையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற திட்டத்துடனேயே தயாநிதிமாறன் திமுகவினர் உதவியுடன் வன்முறைகளை ஏவிவருகின்றார். திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு தேர்தலின் மூலம் மக்கள் தக்க பதிலடி தருவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதிமாறன் அவதூறு வழக்கு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன், “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்”எனத் தெரிவித்தார். 

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்

Next Story

தயாநிதி மாறனை ஆதரித்து மு.க.தமிழரசு வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24) மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மு.க. தமிழரசு தி.நகர் பகுதி வாக்காளர்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்தார். 

 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்