Skip to main content

திமுகவில் மீண்டும் ஐயப்பன் ஐக்கியமாக காரணம்...!

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

 

கடலூர் முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் திமுகவில் இணைந்தார். 2006-11 திமுக ஆட்சியின்போது கடலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஐயப்பன். 2011ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட உட்கட்சி அரசியலால் திமுகவிலிருந்து விலகி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை பெரும் ஆதரவாளர் கூட்டத்துடன் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதிமுகவின் மாவட்ட அவைத்தலைவரானார். 

 

Cuddalore G. Aiyappan join dmk



அதிமுக பிளவின்போது ஓபிஎஸ் அணியில் இருந்தார் இவர். ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்புக்குப் பிறகு ஓபிஎஸ் தனக்கு உறுதுணையாக வந்தவர்களை புறக்கணிப்பதாக செய்திகள் வந்தன. பலரும் இந்தக் குற்றச்சாட்டை எழுப்பினர். ஐயப்பன், திமுகவில் இணைய இதுவும் முக்கிய காரணம் என்கிறார்கள் கடலூர் லோக்கல் அரசியல்வாதிகள். 

 

மேலும் ஐயப்பனுக்கு கடலூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கும் ஆதரவு அதிமுக அமைச்சர் சம்பத்துக்கு கவலை தந்ததாகவும், அதனால் இவரை கட்சியில் ஓரங்கட்டும் நோக்கில் செயல்பட்டதாகவும் சொல்கிறார்கள் கடலூர் அதிமுகவினர். கலைஞர் ஒருமுறை கடலூர் சென்றபோது ஐயப்பன் இல்லத்தில் தங்கியுள்ளார். அந்த அளவுக்கு கலைஞரின் அன்பை பெற்றிருந்தார் ஐயப்பன்.

 

11ஆம் தேதி திமுகவில் இவர் இணைவார் என்று செய்தி பரவிய நேரத்தில் கடந்த 9ஆம் தேதி திடீரென கடலூர் தவுலத் நகரில் உள்ள ஐயப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் பறக்கும் படையினர் அவரது வீட்டுக்கு முன்பு முகாமிட்டிருந்தனர். சுமார் 3 மணி நேரம்நடந்த சோதனையில் பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. இது போல சேர்மன் சுந்தரம் நகரில் உள்ள ஐயப்பன் ஆதரவாளர் பிரகாஷ் வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

 

இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து ஐயப்பன் செய்தியாளர்களிடம், “மாவட்ட அமைச்சர் சம்பத்தின் செயல்பாடு பிடிக்காமல் நான் கட்சியை விட்டு விலக முடிவு செய்து மாவட்ட அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அதிமுக தலைமைக்கு கடிதம் அனுப்பினேன். இதனை பொறுக்காத சிலர் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக பொய் தகவலை அளித்து, வருமானவரித் துறையினரை சோதனைசெய்ய வைத்துள்னர். ஆனால், என் வீட்டில் எதுவும் இல்லை என்று சென்றுவிட்டனர்'' என கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.