Skip to main content

வழக்கிலிருந்து விடுதலை... உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற கு.வாஞ்சிநாதன்

Published on 19/10/2020 | Edited on 19/10/2020
ddd

 

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசின் மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக சிறப்பு கூட்டம் 18.2.2017 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். இதனால் சபாநாயகர் உத்தரவின்பேரில் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் சட்டை கிழிந்தது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கைது செய்யப்பட்ட மு.க. ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி கடலூர் மாவட்ட திமுக முன்னாள் மாணவர் அணி அமைப்பாளர், திமுக தலைமை கழக பேச்சாளருமான கு.வாஞ்சிநாதன் தலைமையில், 18.2.2017 அன்று மாலை 4 மணி அளவில் கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கல்லூரி பிற்பட்டோர் நல விடுதி அருகே 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். போராடிய மாணவர்களை போலீசார் கைது செய்து பின்னர் அவர்களை விடுவித்தனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்று விட்டு வீட்டிலிருந்து திமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த கு.வாஞ்சிநாதனை வழிமறித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

 

அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாகவும், பொதுமக்களை அசிங்கமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், தமிழ்நாடு அரசு பொது சொத்துக்கள் சேதம், தடுப்பு சட்டம் போன்ற சட்டத்தின் கீழ் கு.வாஞ்சிநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  

 

கடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண், 2 நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கு.வாஞசிநாதன் பின்னர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 25 நாட்கள் சிறைச்சாலையிலிருந்து நிபந்தனை ஜாமினில் வெளி வந்தார். இரண்டு வருடங்களுக்கு மேலாக வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் மீதான விசாரணை கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் 5.10.2020 அன்று நடந்தது.

 

இவ்வழக்கு தொடர்பாக கு.வாஞ்சிநாதன் ஆஜரானார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மீண்டும் 8.10.2020 அன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். அன்று ஆஜரான பின் 9.10.2020 குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு வழக்கு 12.10.2020 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டு, தீர்ப்பில் இருந்து கு.வாஞ்சிநாதன் விடுதலை செய்யப்பட்டார்.

 

அதனையொட்டி சென்னையில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்தில் கு.வாஞ்சிநாதன்தான் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த தெலுங்கானா முதல்வர்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Telangana Congress Chief Minister says Udhayanidhi Stalin must be punished

சென்னையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இது தொடர்பாக, வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அதன்படி, சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துகள் தவறானது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி தெலுங்கானா மாநிலத்தில், அம்முதல்வர் ரேவந்த் ரெட்டி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் கூறிய கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கள் தவறானது. அது அவருடைய சிந்தனை. சனாதனம் குறித்து அவருடைய கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.