மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் போராட்டம்!

CPI(M) proest

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கரானா காலத்தில்பொதுமக்களுக்கு வாழ்வாதரநிதியாகமாநில அரசு ரூ5000 மற்றும்மத்திய அரசு ரூ.7500 வழங்க வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் 300 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில்சிதம்பரம் நகரத்தில்15 இடங்களில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

CPI(M) proest

வடக்குவீதியில் நடைபெற்ற போராட்டத்தில் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகர்குழுஉறுப்பினர்கள் கலியமூர்த்தி, கோபால் உள்ளிட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு நிவாரணம் கொடுக்க வலிறுத்தி கோசங்களைஎழுப்பினார்கள்.

CPI(M) proest

இதேபோல் புவனகிரி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், திருமுட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொருஒன்றியங்களிலும் சுமார் 20 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

Chidambaram
இதையும் படியுங்கள்
Subscribe