ADVERTISEMENT

"தி.மு.க.வுடன் நாளை தொகுதி ஒப்பந்தம்!" - முத்தரசன் பேட்டி!

06:20 PM Mar 04, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன், டி.ஆர்.பாலு தலைமையிலான குழு சென்னை அறிவாலயத்தில் முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. அதில், தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், இன்று (04/03/2021) மாலை, மீண்டும் திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முத்தரசன், "தி.மு.க.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே நாளை (05/03/2021) தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும். தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்சனையும் இல்லை" என்றார்.

தற்போது வரை தி.மு.க. கூட்டணியில் இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT