Advertisment

மோடி பொறுப்பேற்ற இந்த தினத்தை கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை தெரிவித்த சிபிஐ(எம்) கட்சியினர்! (படங்கள்)

Advertisment

இந்திய நாட்டு மக்களுக்கு உணவளித்துவரும் விவசாயிகள் ஆறுமாத காலம் போராடியும் அவர்களது பிரச்சினைகளை தீர்க்க தவறிய மோடி அரசைக் கண்டித்தும், மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவுபெறும் தினமான மே 26 அன்று நாடு முழுவதும் “கருப்பு தினம்” கடைப்பிடிக்கும் வகையில் பொதுமக்கள் தங்களது இல்லங்களில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்திலும் இப்போராட்டம் CPI(M) சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. இப்போராட்டத்தையொட்டி இன்று (26.5.2021) காலை 10.00 மணிக்கு சென்னையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கருப்புக் கொடி ஏற்றினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்றது.

Balakrishnan cpim Black Flags
இதையும் படியுங்கள்
Subscribe