Skip to main content

''டாஸ்மாக்கில் கள்ள வருமானம்... தடுக்க முற்படுமா அரசு...''- ராஜேஸ்வரி பிரியா ஆதங்கம்!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

 ''counterfeit income in Tasmak ... '' - Rajeswari Priya

 

தீபாவளிக்கு தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளின் மது விற்பனை 431 கோடி எனச் செய்திகள் வெளிவருகின்றன. கடந்த ஆண்டை விட விற்பனை 34 கோடி குறைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனர் மூ.ராஜேஸ்வரி பிரியா  தெரிவித்துள்ளதாவது,

 

'உண்மையை நாம் ஆய்வு செய்ய வேண்டும். கடந்த வாரம் விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜானகி புரம் என்ற இடத்தில் உள்ள  2 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் விலைக்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வு மேற்கொண்டதில்  4 லட்சத்து 70 ஆயிரத்து 660 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களும், இன்னொரு கடையில் இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 485 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களும் இருப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இருப்பு குறைவாக உள்ளது என்பது எவ்வளவு பெரிய ஊழல்.

 

 ''counterfeit income in Tasmak ... '' - Rajeswari Priya

 

இரண்டு கடைகளில் 7லட்சம் ரூபாய் மது பாட்டில்களின் இருப்பு குறைவாக இருக்குமேயானால் 5300 கடைகளில் எத்தனை கோடான கோடி மதிப்பிலான மது பாட்டில்கள் இருப்பு குறைவாக இருக்கும் .எனவே இந்த விற்பனை என்பது பாதி அளவுக்கு மேல் கள்ளத்தனமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை தீபாவளி விற்பனை வரும் வரையில்.

 

அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் சார்பாக நான் போட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் கணினி முறையில் ரசீது வழங்கப்படவேண்டும், விலைப்பட்டியல் வெளியில் வைக்கவேண்டும் என்றும் ,அனைத்து கணக்குகளையும் கணினியில் சேமித்து வைக்கவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது .இந்த தீர்ப்பினை மதிக்காமல் எல்லா கடைகளிலும் மதுபாட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் பணம் வசூலிக்கப்படுகிறது.

 

கள்ள வருமானம் அதிகமாக இருக்கும் துறையாக டாஸ்மாக் இயங்கி வருகிறது.அரசுக்கு வருமானம் வருகிறது என்பதை‌ விட ஆளுங்கட்சியில் உள்ள அரசியல்வாதிகளின் வருமானமும் அதிகாரிகளின் வருமானமும் உயர்ந்து வருகிறது. மதுவினால் பல உயிரிழப்புகளும்,பல குடும்பங்கள் நிம்மதியையும் இழந்து வருகின்றன.

 

மது விலக்கை படிப்படியாக அமல்படுத்த முதலில் கள்ள வருமானத்தை தடுக்க அரசு முற்பட வேண்டும்'என தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.