Skip to main content

முன்னாள் முதல்வர் பழனிசாமி மீது ஆதாரங்களுடன் ஊழல் புகார்; முகாந்திரம் இருப்பதாகக் கூறி தொடர்ந்து விசாரணை

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

Corruption complaint against former Chief Minister Palaniswami with evidence; Continued investigation on the claim that there is a conspiracy

 

அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

 

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக்கல்லூரி என்ற அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி உட்பட 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை எழுப்பி அனைத்துக் கல்லூரிகளிலும் தலா 150 மாணவர்கள் படிக்கும் வசதியை ஏற்படுத்த கடந்த அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக வழக்குத் தொடுத்த ராஜசேகரன் சுட்டிக் காட்டியுள்ளார். 

 

மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு மத்திய அரசு 60% நிதியும், மாநில அரசு 40% நிதியும் ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவக் கல்லூரிக்காகக் கட்டப்படும் இந்தக் கட்டிடங்கள் தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டியிருக்க வேண்டும். ஆனால், கட்டிடங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டுக் கட்டப்படவில்லை. 

 

மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு உண்டான அரசாணை அடிப்படையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கட்டிடங்களின் பரப்பளவு குறித்து அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு மாறாகக் கட்டப்பட்ட கட்டிடங்கள் அனுமதிக்கப்பட்ட பரப்பளவை விடக் குறைவான அளவில் கட்டப்பட்டுள்ளது. முறைகேடாகக் கட்டிடங்கள் கட்டியதில் அரசிற்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

உரிய அளவில் நிதியைப் பெற்றுவிட்டுச் சரியான அளவில் மருத்துவக் கல்லூரி கட்டவில்லை என்றும் அதேபோல் தான் பிற மாவட்டங்களிலும் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இவ்வழக்கில் மருத்துவக் கல்லூரி பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது தொடர்பாகவும் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் முன்னாள் முதல்வராகவும் செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருப்பதாக அந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

 

இது தொடர்பாகத் தமிழக அரசின் ஊழல் கண்காணிப்பு துறைத் தலைவருக்குப் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் சிபிஐ விசாரணை வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. 

 

அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது அலி ஜின்னா ஆஜராகி, இந்தப் புகாரில் முகாந்திரம் உள்ளதாகவும் அரசு ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.