THAMIMUN ANSARI

ஒரு மாத சம்பளமும், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சமும் வழங்கப்படும் என்று நாகை எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகை நிலை குலைய வைத்திருக்கும் கரோணா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளையும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

அந்த வகையில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் எனது ஒரு மாத சம்பளத்தை வழங்குவதுடன், எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்து அரசுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment