Skip to main content

கரோனா நிவாரண உதவிகளை வழங்கிய மு.க.ஸ்டாலின்

Published on 17/05/2020 | Edited on 17/05/2020
dmk



திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (17-05-2020) காலை சென்னையின் பல்வேறு இடங்களில் கரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். துறைமுகம் தொகுதியில் மங்கல வாத்தியம் வாசிப்போர்கள் 180 நபர்களுக்கும், எழும்பூர் தொகுதியில் 126 போதகர்களுக்கும், திரு.வி.க நகர் தொகுதியில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சாலையோர காய்கறி வியாபாரிகள் 200 பேருக்கும் அரிசி, உணவுப் பொருட்கள், கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.


P2 காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு கிருமி நாசினி, முகக்கவசம், சோப்பு, N95 முகக்கவசம் ஆகியவற்றை வழங்கினார். இதனையடுத்து, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட, வார்டு 68 - தீட்டி தோட்டம் 4-வது தெரு,செம்பியம் வியாபாரிகள் நலச்சங்கம் -  கிழக்குப் பகுதியிலுள்ள பாக முகவர்கள், பேஜ் கமிட்டி மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என 2500 நபர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். வார்டு 67 - எஸ்.ஆர்.பி கோவில் தெருவிலுள்ள துறையூர் நாடார் திருமண மண்டபத்தில், மேற்குப் பகுதியிலுள்ள பாக முகவர்கள், பேஜ் கமிட்டி மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என 2500 நபர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

 

 

dmk



பின்னர், வார்டு 67 - எஸ்.ஆர்.பி கோவில் தெருவிலுள்ள நால்வர் திருமண மண்டபத்தில், கொளத்தூர் தொகுதியிலுள்ள 85 ஓவியர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கினார். வார்டு 66 - ஜவஹர் நகர் அலுவலகத்தில்,  ஜிம் பயிற்சியாளர்களுக்கு 160 பேருக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கினார்.

 

dmk



வார்டு 67 - ஜி.கே.எம் காலனி 24-வது தெருவில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.மகேஷ்குமார் அவர்களின் தந்தை மறைவிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்தார்.
பின்னர், அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட, கொரட்டூர் பேருந்து நிலையத்தில், 200 ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், அம்பத்தூர் எஸ்டேட்டில் முடி திருத்தும் தொழிலாளர்கள் 160 பேருக்கும், அருந்ததியின மக்கள் 50 பேருக்கும் அரிசி, உணவுப் பொருட்கள், மளிகை பொருட்கள், கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.
 

 

 

dmk


 

மங்களபுரத்தில் 26.04.2020 அன்று மாரடைப்பால் மறைந்த அம்பத்தூர் மேற்கு பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.வினோத் இல்லத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சென்று துக்கம் விசாரித்தார். பின்னர், வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட, வில்லிவாக்கம் கிழக்குப் பகுதி வட்டம் 97-ல் 04.05.2020 அன்று உடல் நலக்குறைவால் மறைந்த வட்டச் செயலாளர் ஸ்ரீனிவாசன் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்தார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.