ADVERTISEMENT

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி... சென்னையில் அதிக ஆபத்து இருக்கும் பகுதி? எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு!

02:11 PM Apr 10, 2020 | Anonymous (not verified)


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,865 லிருந்து 6,412 ஆக உயர்ந்துள்ளது. இதில் 199 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் சுமார் 504 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,364, தமிழகத்தில் 834, டெல்லியில் 720, ராஜஸ்தானில் 463, தெலங்கானாவில் 442, கேரளாவில் 357, ஆந்திராவில் 348, கர்நாடகாவில் 181 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT



இந்த நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 834 பேர்களில் சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 163 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 45 பேரும், திருவிக நகரில் 24 பேரும், கோடம்பாக்கத்தில் 19 பேரும், அண்ணாநகரில் 17 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 14 பேரும், தேனாம்பேட்டையில் 12 பேரும் உள்ளனர். இதனால், இந்தப் பகுதிகள் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய பகுதிகள் எனச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT