Skip to main content

கரோனா செயல்பாடுகள்! ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளிடையே மோதல்! சிறப்பு அதிகாரி நியமனம்!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

Corona


சென்னையில் கரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. அதன் ருத்தரதாண்டவம் நாளுக்குநாள் அதிகரித்தபடியே இருக்கிறது. இந்த நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சென்னை மாநகராட்சி கமிஷ்னர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.சின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சில உத்தரவுகளைப் பிறப்பிக்க, கரோனா மண்டலங்களை மேற்பார்வையிட்டு நுண்ணிய ரிப்போர்ட்டுகளைத் தருவதற்காகப் புதிதாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். 
 


சென்னையின் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.சின் செயல்பாடுகள் திருப்தியளிக்காத நிலையில்தான், சென்னையில் கரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரியாக முன்னாள் சுகாதாரத் துறை செக்ரட்டரி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சை நியமித்தது அரசு. ராதாகிருஷ்ணன் எடுக்கும் தீவிர நடவடிக்கைகளுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை. இதனால் பல நடவடிக்கைகளில் முரண்பட்ட தகவல்கள் மக்களுக்குக் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக, பிரகாஷின் அறிவிப்புகள் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கும் இடையூறாக இருந்தன. 
                      
கரோனா நெருக்கடியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடையே நடக்கும் ஒருங்கிணைப்பு இல்லாத போக்குகள் குறித்து முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் இது குறித்து எடப்பாடி பழனிசாமி விவாதித்தார். இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி கமிஷ்னர் பிரகாஷை தொடர்பு கொண்டு கடிந்துகொண்டார். மேலும், இது குறித்து விளக்கமளிக்குமாறு கடிதமும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
 

 

                      
இதனையடுத்து ராதாகிருஷ்ணனுக்கு கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி, ’’கரோனா உள்ளவர்களுடன் தொடர்புடையவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்துவது தொடரும். தனிமைப்படுத்தபடுதலை கடைப்பிடிக்காதவர்கள் அரசின் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்‘’ என்று அறிவித்தார். அதிகாரிகளுடன் ஒற்றுமையில்லாதததும் ஒருங்கிணைப்பு இல்லாததும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் வெளிப்படையாகவே தெரியத்துவங்கியிருக்கிறது என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.
       
இந்த நிலையில், சென்னையில் கரோனா பரவல் தீவிரம் அடைந்து கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் கரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் சிறப்புத் திட்டங்கள் வகுத்து அதனைச் செயல்படுத்த தமிழக அரசின் நில நிர்வாக ஆணையர் பங்கஜ்குமார் பன்சால் ஐ.ஏ.எஸ். அதிகாரியைச் சிறப்பு ஒருங்கிணைப்பாளராக நியமித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 
 

http://onelink.to/nknapp

                   
சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் ராயபுரம், தண்டையார்பேட்டை, அண்ணாநகர், திரு,வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து இருப்பதாக அரசாணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களில் கரோனாவை கட்டுப்படுத்த நுண்ணிய அளவிலான சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தவே சிறப்பு அதிகாரியாக பங்கஜ்குமார் பன்சால் நியமிக்கப்பட்டிருக்கிறார். தினமும் தலைமைச் செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்யவும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பல கோடி ரூபாய் வரி பாக்கி; சிக்கிய மத்திய அரசு நிறுவனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
12 crore in tax arrears; Chennai Corporation Notice to Central Govt

கோடிக்கணக்கில் சொத்து வரி நிலுவையில் வைத்திருந்த மத்திய அரசின் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தின் முகப்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி விட்டு சென்றனர். வரிபாக்கி நிலுவை காரணமாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மொத்தமாக 10.3 கோடி சொத்து வரியை செலுத்தாமல் போர்ட்ரஸ்ட் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததால் சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் என பலமுறை சுற்றறிக்கை அனுப்பியும் வரி செலுத்த முன் வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 'குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் போர்ட் டிரஸ்ட் நிறுவனம் சொத்து வரியை செலுத்த முன் வராமல் இருந்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பாக்கியாக 10.3 கோடி ரூபாய் சொத்து வரியோடு, நடப்பாண்டில் செலுத்த வேண்டிய 2.2 கோடி ரூபாய் என மொத்தமாக 12. 5 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களிடம் சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை வசூலிப்பதை தீவிரப்படுத்தாமல் இருந்த நிலையில், மார்ச் 31ம்  தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தக்கூடிய அவகாசம் முடிவடைகிறது. இதனால் பல பகுதிகளில் பல்வேறு வரி பாக்கிகளை மாநகராட்சி வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story

சென்னை மாநகராட்சிக்கு அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
The High Court fined the Chennai Corporation

திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகளை மேற்கொண்ட சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (27.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சமுதாயத்தில் பணபலம் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள் தான் வாழ முடிகிறது. சாதாரண மக்களால் சிறிய அளவில் வீடு கட்ட வேண்டும் என்றால் கூட லஞ்சம் கேட்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) ஆகியவற்றுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 2 லட்ச ரூபாயும், தனியார் மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் இந்த அபராத தொகையான ரூ. 37 லட்சத்தை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தனர்.