வட சென்னை, எருக்கஞ்சேரியில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் கரோனா தொற்று சோதனை முகாம் நடந்தது. அதில் அமைச்சர் மா.பாண்டியராஜன் மற்றும் வட சென்னை மாவட்டசெயலாளர் ராஜேஷ் ஆகியோர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினர்.

வட சென்னை, எருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி சாலையில் உள்ள பகுதி-9, வார்டு- 35ல் கரோனா தொற்று கண்டறிய தற்காலிகமாக சென்னை மாநகராட்சி பணியாளர்களாக பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆலோசனை மற்றும் அவர்களின் குறைகளை கேட்டறிந்து குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று மா.பாண்டியராஜன் வாக்குறுதி தந்தார்.

Advertisment