Skip to main content

சர்ச்சை பேச்சு.. உதயநிதி மீது வழக்கு.. ஆளும்கட்சி எம்.எல்.ஏ மீது எப்போது வழக்கு?

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

Controversial speech .. Case against Udayanidhi .. When is the case against the ruling party MLA?


சொத்து குவிப்பு வழக்கில் பெங்களுரூ சிறையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் காலில் விழுந்து முதல்வர் பதவி வாங்கியவர் எடப்பாடி என தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசினார். அப்படி பேசியவர் கொச்சையான வார்த்தையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை பலரும் கண்டித்தனர்.
 


உதயநிதியின் பேச்சைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆரணி நகரில் ஜனவரி 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வடக்கு மா.செவும், செய்யார் தொகுதி எம்.எல்.ஏவுமான தூசி.மோகன், “உங்க குடும்பத்தைப்பத்தி தெரியாதா, எங்களை கோபப்படவைக்காதிங்க, வெட்டி வீசிடுவோம். எப்படி பேசறதுன்னு உங்களுக்கு தெரியுமா” என ஒருமையிலும் அநாகரிகமான வார்த்தையிலும் பேசினார்.

 


சட்டமன்ற உறுப்பினராகவுள்ள தூசி.மோகன், மேடையில் நூற்றுக் கணக்கானவர்கள் முன்னிலையில் அநாகரிகமான வார்த்தையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அநாகரிகமாக பேசினார் என்பதற்காக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் நாம் மேடையேறி பேசுகிறோம். கண்டித்து பேசுவதை விட்டுவிட்டு அவர் பேசியதைப்போல் எம்.எல்.ஏவே கொச்சையாக பேசுகிறாறே என அ.தி.மு.க. பிரமுகர்களே முகம் சுளித்தனர்.

 

அ.தி.மு.க. எம்.எல்.ஏவின் அநாகரிக மற்றும் மிரட்டல் பேச்சைக்கேட்டு ஆரணியை சேர்ந்த தி.மு.க. வழக்கறிஞர் கார்த்திக், ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார்.

 

அநாகரிகமாக பேசினார் என உதயநிதி மீது, அ.தி.மு.க.வினர் தந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளது போலீஸ். அ.தி.மு.க. எம்.எல்.ஏ மிரட்டல் விடுத்து பேசியது தொடர்பாக புகார் தந்தும் அந்தப் புகார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் போலீஸார் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.