Skip to main content

அமைச்சர் தரப்பின் மீது தொடரும் மோசடி புகார்கள். – அதிருப்தியில் அதிமுக தலைமை!!

Published on 21/04/2021 | Edited on 21/04/2021
Continuing fraud complaints against the ministerial side

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி எம்.எல்.ஏவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபிலின் உதவியாளர் பிரகாசம் மீது தொடர்ச்சியாக மோசடி புகார்கள் கிளம்பிய வண்ணம் உள்ளன. கடந்த வாரம் ஒரு பெண் தனது கைக்குழந்தை மற்றும் கணவர், அம்மாவுடன் வந்து 15 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டதாக புகார் தர வந்துயிருந்தார். புகார் தராதீர்கள் பணத்தை திருப்பி தந்துவிடுகிறோம் என அமைச்சரின் சார்பில் சில நிர்வாகிகள் வந்து பேச காவல்நிலையத்துக்கு வந்துவிட்டு அந்த பெண் திரும்பி சென்றுவிட்டார். 

 

இந்நிலையில் அதே வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் ஆன்லைனில் புகார் அளித்துள்ளர். அந்த புகாரில், “கூட்டுறவு துறையில் நியாய விலைக்கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி 2018ல் 5 லட்ச ரூபாய் பணம் வாங்கினார். ஆனால் இப்போது வரை அந்தப்பணத்தை திருப்பி தரவில்லை. 2021 ஏப்ரல் 18 ஆம் தேதி பணம் தருவதாக கூறி அமைச்சர் வீட்டுக்கு வரச்சொன்னார் பிரகாசம். அங்கே சென்ற என்னையும், என் அண்ணனையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார் பிரகாசம். அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என ஆன்லைன் வழியாக திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையிடம் புகார் தந்துள்ளார்.

 

தொடர்ச்சியாக அமைச்சர் நிலோபர்கபிலை மையப்படுத்தி மோசடி புகார்கள் வருவது அதிமுகவினரையும், அதிமுக தலைமையையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

ஐ.டி. ரெய்டில் ரூ. 40 லட்சம் பறிமுதல்; திருப்பத்தூரில் பரபரப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
IT Raid Rs. 40 lakh forfeited; Busy in Tiruppathur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே சமயம் திருப்பத்தூர் மாவட்டம் திருநாதர் முதலியார் என்ற பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ, ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷின் அக்காள் மருமகன் ஆவார். இத்தகைய சூழலில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து வருமான வரித்துறையினருக்கு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நவீன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது ரூ. 40 லட்சம் ரொக்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வருமான வரித்துறை சோத்னையின் மூலம்  ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.