Skip to main content

ஒ.பி.எஸ்.மகனுக்காக முதல்வர் படம் இல்லாத கூட்ட அரங்கில் ஆலோசனை கூட்டம்!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

Consultative meeting in the meeting hall without the picture of the Chief Minister for the son of OPS!

 

தேனி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றம் எம்.பி ஆகியோர் கலந்து கொள்வர் என செய்தித் துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. 

 

இதற்காக சமூக இடைவெளியுடன் கூடிய பெரிய அரங்கு ஒன்றில் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உருவ படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக எம்.பி.யும் ஒ.பி.எஸ். மகனுமான ரவீந்திரநாத், முதல்வர் படம் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் படம் உள்ள அந்த அரங்கில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடத்தினால் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று மாவட்ட அதிகாரியிடம் கூறியதாகவும் இதனால் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண உன்னி உடனடியாக கலெக்டர் அறைக்கு அருகே உள்ள சிறிய அளவிலான கூட்டரங்கில் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் இல்லாத கூட்ட அரங்கில் தடுப்பு கூட்டத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது. 

 

இதனை அடுத்து நடந்த அந்தக் கூட்டத்தில் அதிமுக எம்.பி. கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களான கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால் கரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடக்கும் அரங்கம் சிறியதாக இருந்ததால் சமூக இடைவெளி இல்லாமல் எம்.பி. எம்.எல்.ஏ.கள் மற்றும் அதிகாரிகளும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அமர்ந்து இருந்தனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.