Skip to main content

“ராமருக்கு மோடி கோவில் கட்டமாட்டார் நாங்கதான் கட்டுவோம்” காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நாகர்கோவிலில் செய்தியாளா்களிடம் பேசும்போது, “நாட்டில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 25 கோடி மக்களுக்கு மாதம் தோறும் ரூ. 6 ஆயிரம் அறிவித்ததோடு விவசாயத்துக்காக தனி பட்ஜெட்டையும் காங்கிரஸ் தர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளோம். நாட்டில் வறுமையை ஓழிக்க காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். 

 

ks azhagiri


              

1947-ல் சுதந்திரம் அடைந்த நேரத்தில் நாட்டில் 90 சதவீதம் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தார்கள் தற்போது 20 சதவீதம் பேர்தான் இருக்கிறார்கள். வறுமையை விரட்டிய பெருமைகள் காங்கிரஸ் தலைமையைதான் சாரும். ஆண்டு தோறும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா 72 ஆயிரம் ருபாய் வழங்கினால் மூன்றரை லட்சம் கோடி செலவாகுமே அது சாத்தியமாகுமா என பாஜக கேட்கிறது. இந்தியாவின் ஆண்டு வருமானம் 230 லட்சம் கோடி ரூபாய், காங்கிரஸ் ஆட்சி வந்ததும் அது 400 லட்சம் கோடியாக மாறும் அதிலிருந்து மூன்றரை லட்சம் கோடி ஏழைகளுக்கு கொடுப்பதில் தவறு இல்லை.

              

பாஜக பட்ஜெட்டில் ராமர் கோவில் கட்டுவோம் என்று கூறியிருக்கிறார்கள். அவர்கள் ராமர் கோவில் கட்டமாட்டார்கள் கட்டினால் அதோடு பாஜக கட்சியும் முடிந்து விடும். அதை வச்சிதான் பாஜக அரசியல் செய்கிறது. ராமருக்கு கோவில் நாங்க தான் கட்டுவோம் அதுவும் பாபர் மசூதி இருந்த இடத்தில் அல்ல. பள்ளி வாசல் தேவாலயங்களை இடித்தும் அல்ல.  நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் பிரச்சனை இல்லாத இடத்தில் கட்டுவோம். ராமரின் உண்மையான சீடரே மகாத்மா காந்திதான் அவர் ராமருக்கு கோவில் கட்டினார் அவருடைய இதயத்தில். 

         
 
மோடியின் கையில் இருந்தால்தான் இந்தியாவுக்கு பாதுகாப்பு என்கிறார் எடப்பாடி. மோடியின் கையில் இருக்கிற எடப்பாடிக்கே பாதுகாப்பு இல்லாதபோது எப்படி இந்தியாவுக்கு பாதுகாப்பு இருக்கும். அரசு ஊழியர்களின் ஓட்டு அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் கிடைக்காது என்பதால் தபால் ஓட்டு சீட்டுகளை பெரும்பான்மையினருக்கு வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள்” என குற்றம் சாட்டினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.