Skip to main content

''காங்கிரஸ் ஒரு பல்லில்லாத பாம்பு...''-பாஜக தலைவர் அண்ணாமலை தாக்கு!

Published on 01/01/2022 | Edited on 01/01/2022

 

 '' Congress is a toothless snake ... '' - BJP leader attacks

 

கள்ளக்குறிச்சியில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கள்ளக்குறிச்சி வந்திருந்தார். கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''தமிழகத்தில் 2021ஆம் ஆண்டுக்கான பேரிடர் நிதியாக மாநில அரசு தனது பங்கை கொடுப்பதற்கு முன்னரே மத்திய அரசு தனது பங்கை மாநில அரசுக்கு தந்துள்ளது. அதை மாநில அரசு செலவும் செய்துள்ளது. தமிழக அரசு கேட்பதற்கு முன்பே அதிகமான நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிக் கொண்டுதான் உள்ளது. திமுகவைச் சேர்ந்த எம்.பிக்கள், அமைச்சர்கள் மத்திய அரசு தமிழக அரசை நன்றாக பார்த்துக் கொள்கிறது எந்த பாரபட்சமும் இல்லாமல் நடத்துவதாகக் கூறி உள்ளனர். அதேபோன்று பெட்ரோல், டீசல்  விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டுமென திமுகவைச் சேர்ந்த எம்.பி,  டி.ஆர்.பாலு அவ்வப்போது கூறி வருகிறார்.

 

இதே கருத்தைத்தான் நாங்களும் கூறி வருகிறோம். ஆனால் மாநில நிதித்துறை அமைச்சராக உள்ள தியாகராஜன் ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலையைக் கொண்டு வரமாட்டோம் என்று கூறுகிறார். பெட்ரோல், டீசல் விலை குறித்து மக்களை திமுக தரப்பினர் இரண்டு விதமான கருத்துக்களைக் கூறி குழப்பம் அடையச் செய்து வருகின்றனர். மேலும் அனைத்து மத்திய அரசின் பட்ஜெட்டிலும் தமிழகத்திற்கு வலுசேர்க்கும் விதமாகச் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் ஏழரை லட்சம் கோடிக்கு மேல் தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசு இதன் மூலம் ஸ்மார்ட் சிட்டி, மருத்துவக் கல்லூரி உட்பட பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு நிறைவேற்றி மற்ற மாநிலங்களை விட தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு முழு காரணம் மத்திய அரசு என்பதை மறந்துவிடக் கூடாது. அதேபோன்று பாஜக-அதிமுக கூட்டணி நன்றாகவே உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சி என்பது ஒரு பல்லில்லாத பாம்பு. அவர்களுக்குள் உள்ள உட்கட்சி பிரச்சினையைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல், கண்ணாடி கூண்டுக்குள் உட்கார்ந்து கொண்டு கல் எறிந்து வருகிறார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.