சென்னை, சத்தியமூர்த்தி பவன் நுழைவு வாயிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் இன்று (20.09.2021) மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சத்தியமூர்த்தி பவன் வெளியே ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Advertisment