congress protest

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

Advertisment

அப்போது பேசிய திருநாவுக்கரசர், பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவையும், மக்கள் பாதிப்பையும் கருத்தில் கொண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி அறிவுறுத்தலின்பேரில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்த 3ஆம் ஆண்டின் துவக்க நாளை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்ததாக கூறினார்.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.