வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பொங்கல் வைத்துக் கொண்டாடப்பட்டது.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அக்கட்சியினர் சத்தியமூர்த்தி பவனில் நேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினர். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.