Advertisment

தெலுங்கானாவை விட்டு வெளியேறப்போகும் காங். எம்.எல்.ஏ.க்கள்?

vCongress MLAs to leave Telangana

Advertisment

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் அண்மையில் நடைபெற்ற நிலையில், கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி தெலங்கானா மாநில தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலுக்கு கருத்துக்கணிப்புகளும் அன்று மாலையில் இருந்து வெளி வரத்தொடங்கியது.

கருத்துக்கணிப்பில் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து பாஜக ஆட்சியை பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. மிசோரமில் எதிர்க்கட்சியாக இருக்கும் இசட்.பி.எம் எனும் மாநில கட்சி ஆட்சியை பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த ஐந்து மாநிலத் தேர்ததில்,மிசோரம் தவிர்த்து மற்ற நான்கு மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கைநாளை (டிசம்பர் 3ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன. மிசோரம் மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கை டிச. 4ம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Congress MLAs to leave Telangana

Advertisment

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டத்தில் இருந்து இரு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் முதல்வர் கே.சி.ஆர். தலைமையிலான பி.ஆர்.எஸ். இந்த முறை தோல்வியை தழுவலாம் எனச் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து அங்கு குதிரை பேரம் மற்றும் கட்சி தாவல்கள் நடைபெறலாம் என காங்கிரஸ் தரப்பில் யூகித்து, தெலுங்கானாவில் வெற்றிபெறும் எம்.எல்.ஏ.க்களை வேறு மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெலுங்கானா மாநிலத்திற்கு இன்று செல்லவுள்ளதாகவும் பிறகு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களைகர்நாடகா மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

telungana congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe