Skip to main content

மோடிக்கு ரங்கா-பில்லா என்று பெயர் சூட்டுகிறேன்!!! -பி.வி.சீனிவாஸ்

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

 

congress


 


மோடிக்கு புதிதாக ரங்கா-பில்லா என்று பெயர் சூட்டுகிறேன் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய துணைத்தலைவர் பி.வி.சீனிவாஸ் பேசினார்.

 
திண்டுக்கல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக, திண்டுக்கல் மணிக்கூண்டில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்திற்கு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் டி.வி.சீனிவாஸ், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர்கள் ஜெபி மேத்தர், ஆபிரகாம்ராய்மணி, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன்மௌலானா தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி உள்பட பலர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
 

இக்கூட்டத்தில் பேசிய அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பி.வி. சீனிவாஸ், பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது. அந்த தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதன்மூலம் ராகுல்காந்தி பிரதமராக வருவார். அப்போது தமிழ்நாட்டிற்கு பல நல்ல திட்டங்கள் கொண்டுவரப்படும். மோடிக்கு நான் ரங்கா-பில்லா என்று பெயர் சூட்டுகிறேன். அவர்களைப் போல பெரிய கொள்ளைக்காரன் தான் மோடி என்று பேசினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்