ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி! 

Congress candidate wins in Sriperumbudur

மிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 158 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 75 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில்அதிமுக வேட்பாளர் பழனியைவிட 10,745 வாக்குகள் கூடுதலாகபெற்றுகாங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகைவெற்றிபெற்றுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளார்.

congress sriperumputhur tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe