Skip to main content

தி.மு.க.வை நம்பி களம் இறங்கும் திருநாவுக்கரசர்! 

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

 

திருச்சி எம்.பி. தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் அறந்தாங்கி திருநாவுக்கரசர் ஏற்கனவே 11 முறை தேர்தல் களம் கண்டவர். கூட்டணி கட்சியை அனுசரித்து செல்லக் கூடிய பக்குவம் கொண்டவர். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக காலை திருச்சி வந்த அவர், மதியம் 12 மணிக்கு காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பார் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதன்படி பத்திரிகையாளர்களும் அங்கு காத்திருந்தனர். ஆனால் கட்சி அலுவலகத்திற்கு வந்த அவர் வெளியே இருந்த காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மன்றத்திற்கு நுழைந்துவிட்டார்.

 

Tiruchirappalli Lok Sabha congress candidate su.thirunavukkarasar


 

சில நிமிடங்களுக்குப் பின் அங்கிருந்து புறப்பட தயாரானார். அப்போது தொண்டர்கள் ''புரட்சி தலைவரின் தவப்புதல்வன் திருநாவுக்கரசு வாழ்க, புரட்சித் தலைவர் வாழ்க'' என கோஷம் போட்டனர். உடனே சுதாரித்துக் கொண்டு ''புரட்சித் தலைவர் திருநாவுக்கரசு வாழ்க'' என கோஷமிட்டனர். இதை சிரித்தபடியே ரசித்தவர், ''நல்ல நேரம் முடிவதற்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். அதனால் உங்களை காக்க வைத்ததற்காக மன்னிக்க வேண்டும்'' என்று பத்திரிக்கையாளர்கள் கும்பிடு போட்டு விட்டு நேராக கலைஞர் அறிவாலயம் சென்று அங்கு திமுக நிர்வாகிகளை சந்தித்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்புறப்பட்டார்.

 

அவர் செல்லும் இடங்களிலெல்லாம் ''வந்தே மாதரம்'' என்ற கோஷமும் ''புரட்சித் தளபதி'' என்ற குழப்பமும் ''புரட்சித் தலைவர்'' என்ற கோஷமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.


 

Tiruchirappalli Lok Sabha congress candidate su.thirunavukkarasar



ஆனால் நேற்று திருச்சியில் திருநாவுக்கரசரை சுற்றி இருந்தவர்கள் அறந்தாங்கியில் உள்ள அவரது ஆதரவாளர்கள். அவர்கள் யாரும் திருச்சி எம்.பி. தொகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என்பது தான் அப்பட்டமான உண்மை. லோக்கல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மருந்துக்கு கூட இல்லை என்பது தான் வேடிக்கையான விசயம். 


 

Tiruchirappalli Lok Sabha congress candidate su.thirunavukkarasar



ஒரே ஆறுதலான விசயம் எம்.ஜி.ஆர். காலத்தில் மாவட்ட செயலாளராக இருந்த சவுந்திராஜன் ஓட்டலில் தங்கியிருந்த திருநாவுக்கரசரை நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். ''எம்.ஜி.ஆர். காலத்து ஆளுங்க நிறைய பேர் திருச்சியில் இருக்காங்க, அவர்களை சந்தித்து திருநாவுக்கரசரை ஜெயிக்க வைக்கும் வேலையை செய்வேன்'' என்றார். 

 

அதே போல உடன் சென்றவர்கள் யாரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை. திருச்சி திமுக மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், அன்பழகன் என எல்லாம் திருச்சியை சேர்ந்த திமுக கூட்டமாகவே இருந்தது. கடந்த முறை சாருபாலா தொண்டைமான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 56 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருந்தார். காங்கிரஸ் ஓட்டை நம்பி ஜெயிக்க முடியாது என்பது திருநாவுக்கரசருக்கு தெரியும். முழுக்க திமுகவை நம்பி களத்தில் நிற்கிறார் என்பதே தற்போதைய கள நிலவரம். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.