Skip to main content

நிலக்கோட்டை தொகுதியில் உள்ள பேரூராட்சி தேர்தலுக்கு திமுகவில் மல்லுக்கட்டு!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

Computation in DMK for municipal elections in Nilakkottai constituency!

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டிவருகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக விருப்ப மனுக்களைப் பெற்றுவருகிறது. அதிமுக ஏற்கனவே தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. 

 

தேர்தலில் போட்டியிட ஆளும் கட்சியில் கடும் போட்டியும் நிலவிவருகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் சொந்த ஊரான வத்தலக்குண்டு பேரூராட்சியில் தலைவர் வேட்பாளர் யார் என்பதில் அமைச்சரின் உறவினர்களுக்கும், விசுவாசிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. உறவுகளான திமுக நகரச் செயலாளர் சின்னதுரை மற்றும் முன்னாள் பேரூராட்சித் தலைவர் கனகதுரை, தீவிர விசுவாசிகளான பத்திர எழுத்தர் பா. சிதம்பரம், கூட்டுறவு நகர வங்கித் தலைவர் ரிலாக்ஸ் கணேசன் உள்ளிட்ட சிலரும்  சீட்டு வாங்குவதில் மும்முரம் காட்டிவருகின்றனர். 

 

Computation in DMK for municipal elections in Nilakkottai constituency!

 

அமைச்சரின் கடைக்கண் பார்வை விசுவாசிகளின் பக்கமே தற்போதுவரை இருக்கும் நிலையில், எதிர்த்துப் போட்டியிடும் அதிமுகவில் ஒன் மேன் ஆர்மியாக அக்கட்சியின் நகரச் செயலாளர் பீர்முகமது களமிறங்குகிறார். 10 ஆண்டுகளாக சேர்த்துவைத்த அனைத்தையும் வாரி இறைக்கத் தயாராக இருக்கும் பீர்முகமதுவை கட்சித் தலைமை அறிவிக்க வேண்டியது ஒன்று மட்டுமே பாக்கி. மும்முனைப் போட்டியாக மக்கள் நீதி மய்யம் ஒன்றியச் செயலாளர் மனோ தீபன் தலைமையில் வெற்றி வாய்ப்புள்ள வார்டுகளைத் தேர்ந்தெடுத்து அக்கட்சியினர் போட்டியிட தயாராகிவருகின்றனர்.

 

இதேபோல் நிலக்கோட்டையில் பேரூராட்சி நிர்வாகம் தற்போதுவரை அதிமுக எம்‌.எல்.ஏ., தேன்மொழியின் கணவர் சேகர் கட்டுப்பாட்டில் இருந்துவரும் நிலையில், இங்கு அதிமுகவை எதிர்த்துதான் திமுக போட்டியிட உள்ளது. நிலக்கோட்டை திமுகவின் நகரத் துணைச் செயலாளர்கள் ஜோசப் கோவில் பிள்ளை, முருகேசன் ஆகிய இருவரில் ஒருவர் சீட் பெற்றுவிடுவதில் முனைப்பு காட்டுகின்றனர். 

 

நகரச் செயலாளர் கதிரேசன் பழம் எனக்குத்தான் என களத்தில் உள்ளார். இப்படி திமுகவினருக்கு இடையே கடும் போட்டி இருந்தாலும்கூட, இந்தமுறை நிலக்கோட்டை பேரூராட்சியைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர் ஐ. பெரியசாமி தீவிரம் காட்டிவருகிறார். அதிமுகவைப் பொறுத்தவரை ஒரு வீட்டில் இரண்டு பதவியா என கலகக் குரல் கட்சியில் கேட்கும் நிலையில், அதனை சமாளிக்க சேகர் தனது நிழலாக இருக்கும் முத்துவை களமிறக்க ஏற்பாடு செய்துவருகிறார்.

 

Computation in DMK for municipal elections in Nilakkottai constituency!

 

அதுபோல், அம்மைய நாயக்கனூர் பேரூராட்சியில் திமுக நகரச் செயலாளர் செல்வராஜ், அதிமுக நகரச் செயலாளர் தண்டபாணி ஆகியோர் மட்டுமே நேரடியாக களமிறங்குகின்றனர். இருந்தாலும், திமுக மாவட்ட துணைச் செயலாளரும் ஐ. பெரியசாமியின் தீவிர விசுவாசியுமான நாகராஜன், இந்தத் தேர்தலில் தனது மகன் விமல்குமாரை களமிறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சரிடம் காய் நகர்த்திவருகிறார். இதுபோல் சேவுகம்பட்டி பேரூராட்சியில் திமுக நகரச் செயலாளர் தங்கராஜ், அதிமுக நகரச் செயலாளர் மாசாணம் ஆகியோர் களம் காண தயாராகிவருகின்றனர். இதேபோல் பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் திமுக நகரச் செயலாளர் அருண்குமார், அதிமுக நகரச் செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் களம் காண தயாராகி வருகின்றனர்.

 

இப்படி நிலக்கோட்டை தொகுதியில் உள்ள 5 பேரூராட்சிகளிலும் இப்போதே அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதேபோல், எதிர்க்கட்சிகளைவிட ஆளும்கட்சியில் உள்ளவர்களுக்கு இடையேதான் சீட்டுக்கான மல்லுகட்டும் தொடங்கியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.