Skip to main content

'ஓட்டு' வீட்டிலிருந்து ஒரு வேட்பாளர்! - அள்ளிக் கொடுத்த தொழிலாளர்கள்!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

communist candidates who filed nomination with help of surrounded peoples

 

தேர்தல் காலம் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் முதல் அதிருப்தியாளர்கள், சுயேச்சைகள் எனப் பலரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில், ஒரு சில வேட்பாளர்கள் இன்று வரை வறுமை நிலையில் உள்ளவர்களாகவே உள்ளனர். ஆனால், அவர்களுக்கு மக்களிடம் நல்ல அறிமுகம் உள்ளதால், வாய்ப்புகள் தேடி வந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் வடக்கு கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரையை, மாணவப் பருவத்திலேயே கம்யூனிசம் ஈர்த்ததால், அவ்வழியே புறப்பட்டுவிட்டார். 

 

எங்கே ஒரு அநீதி என்றாலும், முதல் குரலாக ஓங்கி ஒலித்ததால், மார்சிஸ்ட் கட்சியில் படிப்படியாக உயர்ந்து மா.செ பதவியும் வகித்து, தற்போது மாநிலக்குழுவில் பயணிக்கிறார். மார்க்சிஸ்டாக தன்னை இணைத்துக் கொண்ட அன்று முதல் இன்று வரை பல நாட்கள் வீட்டுப்பக்கம் செல்வதே குறைவு. எப்போதாவது நடுராத்திரியில் வீட்டுக்குப் போய் அதிகாலையில் எழுந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பேசத் தொடங்கி விடுவது வழக்கம். இவரது அரசியல் பயணம் முழுமையாக மக்களோடு மக்களாக இருந்ததால், கடந்த முறை மக்கள் நலக் கூட்டணியில் கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றார்.

 

communist candidates who filed nomination with help of surrounded peoples

 

இந்த முறை, திமுக கூட்டணியில், கம்யூனிஸ்ட்களுக்கு தலா ஆறு தொகுதிகளைக் கொடுத்தாலும், வெற்றி பெறும் தொகுதிகளாகக் கொடுத்திருக்கிறார்கள் என்ற மனநிறைவோடு கூட்டணி துணையோடு களப்பணியில் கலக்கி வருகிறார்கள். கடைசி நாளான இன்று வேட்பு மனுத் தாக்கலுக்குத் தயாரானபோது, திமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், தொழிற்சங்க தொழிலாளர்களும் எங்கள் பணத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யுங்கள் என்று அள்ளிக் கொடுத்துள்ளார்கள். அப்போது, அங்கிருந்தவர்கள் அனைவரும் நெகிழ்ந்து போனார்கள். வேட்பாளர் மட்டுமின்றி சுற்றி நின்ற நண்பர்களும் பணம் கொடுத்ததால், யாருடைய மனமும் வருந்தக் கூடாது என்பதால், அனைவரின் பணத்தில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். பாகுபாடின்றி கூட்டணிக் கட்சியினர் ஒன்றாக இணைந்து ஊர்வலமாகச் சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.  "ஒரு ஓட்டு வீட்டில் இருந்து கோட்டைக்குப் போக உங்கள் ஓட்டைக் கேட்கிறார், வாக்களித்து வாழ்த்தி அனுப்புங்கள் மக்களே!” என்ற கோஷத்துடன் கூட்டணிக் கட்சியினர், வீடுவீடாக வாக்குக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.