Skip to main content

"உயிர் தியாகம் செய்யாமல், வாழ்ந்து போராடுவோம் என்ற முடிவுக்கு வாருங்கள்’’-வைகோ

Published on 12/04/2018 | Edited on 13/04/2018
vaiko1

 

தமிழகத்துக்கு துரோகம் இழைத்த  பிரதமர் மோடியின் வருகையைக் கண்டித்து 
ஈரோடு மாநகரில் இளைஞன் தர்மராஜ்தீக்குளித்து உயிர் நீத்த உன்னதத் தியாகம் என்று வைகோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும் தனது அறிக்கையில், ‘’தமிழ்நாட்டின் உயிர் வாழ்வாதாரமான காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் துரோகம் இழைத்த பிரதமர் நரேந்திரமோடியின் தமிழக வருகையைக் கண்டித்து, ஈரோடு மாநகரில் தாய் தந்தை அற்றவரும், திருமணம் ஆகாதவருமான எந்த அரசியல் கட்சியையும் சாராத தர்மராஜ் என்ற இளைஞர் இன்று தீக்குளித்து உடல் எங்கும் கருகி, சிறிது நேரத்திலேயே உயிர் நீத்தார் என்ற செய்தி பேரிடியாய் என்னைத் தாக்கியது.

 

வாழ்க்கையின் வசந்தத்தைக் காண வேண்டிய வாலிப வயதில் தமிழகத்தை வாழ வைக்க தன்னையே நெருப்புத் தணலுக்குப் பலியிட்டு, உயிரை அர்ப்பணித்துக் கொண்டதை அறிந்து என் உள்ளம் வேதனையால் உடைந்தது.

 

 சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த இந்த இளைஞன் பாட்டிகள் இருவரோடு வசித்து வந்தார். கோவில்களிலும், திருவிழாக்களிலும் சிறு சிறு பொம்மைகள் விற்கின்ற வணிகம் செய்து, வசதியற்ற வாழ்வுதான் நடத்தி வந்துள்ளார். காவிரி தீரத்தில் அவருக்கு நஞ்சை ஒன்றும் இல்லை. ஆனால், தன் உயிரைவிட தமிழக விவசாயிகளின் வாழ்வு, தமிழ்நாட்டின் எதிர்காலம் மேலானது என்று கருதியுள்ளார்.

 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது, தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கின்ற வகையில் தமிழக இளைஞர்கள் தமிழகத்தின் உரிமைகளைக் காக்க உயிர்த் தியாகமும் செய்வார்கள் என்பதை உணர்த்துவதற்காக பற்றி எரியும் நெருப்புக்கு தன் உடலையும், உயிரையும் தந்துள்ளார்.

 

தமிழர்களைத் தலைநிமிர வைத்த பகுத்தறிவுப் பேரொளி அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் காவிரிக்காக தன்னை களபலி ஆக்கிக் கொண்டார் தர்மராஜ். இத்தகைய வீரமும், தியாக உணர்வும் கொண்ட இலட்சோப இலட்சம் இளைஞர்கள் தமிழகத்தில் உள்ளனர். இப்படி தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்கின்ற செயலில் ஈடுபடாமல், வாழ்ந்து போராடுவோம் என்ற முடிவுக்கு வாருங்கள் என தமிழக இளைஞர்களை தந்தையாக, மூத்த அண்ணனாக இருகரம் கூப்பி மன்றாடி வேண்டிக்கொள்கிறேன்.

 

தியாகச் சுடர் தர்மராஜின் இறுதிச் சடங்குகள் நடந்தபோதே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் அ.கணேசமூர்த்தி  அந்த ஏழ்மையான குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் மூன்று இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

 

  வீரத் தியாகி தர்மராஜின் துயர மரணத்தால் கண்ணீரில் தவிக்கும் அக்குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.