Skip to main content

வாக்குறுதியை நிறைவேற்ற முயன்ற கலெக்டர் இடமாற்றம்... ஆளும் கட்சியினர் மீது திமுக குற்றச்சாட்டு...

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

 

அரியலூர் மாவட்ட ஆட்சியராக 01-07-2019ல் டி.ஜி.வினய் பொறுப்பேற்றார். பணியேற்று 3 மாதம் கூட ஆகவில்லை அதற்குள் அவர் மதுரை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார். 

 

ratna

                                                                                      ரத்னா

டி.ஜி.வினய் மூன்று மாதத்திலேயே இடமாற்றம் செய்யப்படுவதற்கான காரணம் என்னவென்று கேள்வி எழுப்பியதுடன், ஆளும் கட்சியினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியுள்ளார் செந்துறை வடக்கு திமுக ஒன்றியச் செயலாளர் மு.ஞானமூர்த்தி.
 

அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் நீர்மேலாண்மைத் திட்டத்தின்கீழ் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட குளங்கள், ஏரிகள், வரத்து வாய்க்கால்கள் தூர்வார திட்டமிடப்பட்டு அதற்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த தேர்தலில் ஒரு சொட்டு நீர் கூட கடலில் கலக்க விட மாட்டோம் என்று நமது தமிழக முதல்வர் பொது மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். அந்த வாக்குறுதியை 100 சதவீதம் உண்மையாக்க வரலாற்று சிறப்பு மிக்க அதிகாரிகளின் ஆய்வு கூட்டங்களை நடத்தி நிறைவேற்ற முயன்றவர் ஆட்சியர் டி.ஜி.வினய். முதல்வர் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முயன்றதற்காக 100 நாளில் மதுரைக்கு மாற்றப்பட்டு உள்ளார். 

 

vinay

                                                                                      டி.ஜி.வினய்
 

அரியலூர் மாவட்டத்தில் 2471 ஏரிகள் கொண்ட மாவட்டம் என்ற பட்டியலை முதன் முதலில் பொது மக்கள் பார்வைக்கு வெளியிட்ட ஆட்சியர் டி.ஜி.வினய். அத்தனை (2471) ஏரிகளையும், குளங்களையும், குட்டைகளையும் சுற்றி அளந்து சர்வே கல் நட உத்தரவு வழங்கினார். கடலில் கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் பல டி.எம்.சி. நீரை அரியலூர் மாவட்டத்தில் தேக்க என்னென்ன செய்ய வேண்டும் என திட்டத்தை செயல்படுத்த முழு முயற்சி எடுத்தார். 

 

டி.ஜி.வினய் இடமாற்றத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என அரியலூர் மாவட்ட பொதுமக்கள் எதிர் பார்க்கின்றார்கள். பதவி ஏற்ற நூறு நாளில் நூறு ஏரி குளங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாதனை செய்தவர். 2471 ஏரி குளங்களின் பழைய நிலையை ஒரு ஆண்டில் கொண்டு வந்து அதிக நீரை தேக்கி வளமாக பகுதியாக மாற்ற நாள் முழுவதும் செயல்பட்ட நல்ல ஆட்சியர்,  இன்னும் சில ஆண்டுகள் அரியலூர் மாவட்டத்திற்கு தேவை என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


 

 

செந்துறை ஒன்றியத்தில் மட்டும் 153 குளங்கள், ஏரிகள் ஆழப்படுத்தவும், கரைகள் பலப்படுத்தவும் பெருந்தொகை ஒதுக்கப்பட்டது. அந்த தொகை முறையாக செலவழிக்கப்பட்டு ஏரி, குளங்கள் வெட்டப்படவில்லை. வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்படவில்லை. ஆனால் வேலை நடைபெற்றதாக பில் எடுக்க அதிமுகவினர் முயற்சி எடுத்தனர். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் டி. ஜி. வினயிடம் புகார் அளித்தனர். புகார்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட ஏரி, குளங்களை பார்வையிட்டார். 
 

சென்ற வாரம் 04-10-2019 அன்று செந்துறை ஒன்றியம் ஆலத்தியூர் ஊராட்சியில் ரூ. 30 கோடியில் “பிரதான் மந்திரி கானிங் ஷேத்ரா கல்யாண் யோஜனா “ (PMKKKY) திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வெள்ளாறு தடுப்பணை 400 மீட்டர் நீளம் கட்டுதல், இடது புறமும், வலது புறமும் 400 மீட்டர் நீளம் கரையை பலப்படுத்துதல். ஆனைவாரி ஓடையில் 275 மீட்டர் நீளத்தில் தடுப்பணை கட்டுதல். இடது, வலது புறத்தில் 400 மீட்டரில் கரையை பலப்படுத்துதல் ஆகிய பணிகளை ஆய்வு செய்தார். 


 

 

தளவாய், ஈச்சங்காடு, அயன்தத்தனூர் பெரிய ஏரி மற்றும் அயன்தத்தனூர் புது ஏரி ஆகி 4 ஏரிகளை ஆய்வு செய்தார். விவசாயிகளின் புகாரில் உள்ளபடியே ஏரி, குளங்கள் வெட்டப்படாத நிலையில் இருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து ஏரிகளை ஆழப்படுத்த வேண்டும், கரைகளை பலப்படுத்த வேண்டும், மதகு, கலுங்குகள், வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்பட வேண்டும், விவசாய நிலங்களுக்குச் செல்லும் வாயக்கால்கள் கட்டமைக்கப்பட வேண்டும் என எச்சரிக்கை செய்துவிட்டு சென்றார்கள். 

 

மேலும் இந்த ஏரிகள் மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட்டால் தளவாய் தெற்க்கில் 460 ஏக்கரும், ஆலத்தியூர் ஊராட்சியில் 160 ஏக்கரும், கடலூர் மாவட்டம் சம்பேரியில் 1500 ஏக்கரும் மொத்தம் 2110 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் எனவும் தெரிவித்தார். 
 

மேலும் செந்துறை ஒன்றியத்தில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ஆழ்குழாய் கிணருக்கு ஒதுக்கப்பட்ட நிதி பல வழிகளில் முறைகேடாக செலவழிக்கப்பட்டிருக்கிறது. பல ஊராட்சிகளில் மின்மோட்டார்கள் பழுதடைந்ததாக காரணம் காட்டி போலி பில் வாங்கப்பட்டு பல லட்சம் ஊழல் நடைபெற்று உள்ளது. 

 

mg

                                                                            மு.ஞானமூர்த்தி



மாவட்டம் முழுதும் அதிமுகவினர் ஏரி, குளங்களை வெட்டாமல் கையாடல் செய்திருப்பதை கண்டுபிடித்த ஆட்சியர் தொடர்ந்து இருந்தால் மேலும் ஊழல் செய்ய முடியாது என முடிவெடுத்து ஆளும்கட்சியினர் தங்களின் அதிகார துஷ்பிரயோகத்தால் மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்துள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார். 
 

rajendran admk ariyalur

                                                                              எஸ்.ராஜேந்திரன்


இதுகுறித்து அதிமுக சட்டமன்ற கொறடாவும், அரியலூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ராஜேந்திரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது அவருடைய சொந்த கருத்து. இதைப்பற்றி அமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும் என்று முடித்துக்கொண்டார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது