சீன அதிபர் ஜீ ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்தியா வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங், 11 மற்றும் 12-ம் தேதிகளில் மாமல்லபுரத்தில் வைத்து பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்தவுள்ளார். அதற்காக, மாமல்லபுரம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
மேலும், மாமல்லபுரம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தநிலையில், தற்போது மத்திய அரசு சார்பில் ஜீ ஜின்பிங் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’2018-ம் ஆண்டு ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் சீனாவின் யூஹான் பகுதியில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் அதிபர் சந்திப்பு நடைபெற்றது. தற்போது, மோடியின் அழைப்பை ஏற்று, அக்டோபர் 11-12-ம் தேதிகளில் இரண்டாம் கட்ட நட்பு ரீதியான சந்திப்புக்காக ஜீ ஜின்பிங் சென்னை வருகை தரவுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்தச் சந்திப்பின்போது, இருநாட்டின் விவகாரங்கள் குறித்தும், பிராந்தியப் பிரச்னைகள் குறித்தும், உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் விவாதிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இந்தியா, சீனா இணைந்து வளர்ச்சிக்கான பாதையில் செயல்படுவது குறித்தும் கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.