Skip to main content

3 ஆயிரம் கோடி வரை முதல்வர் எடப்பாடி குடும்பம் கொள்ளையடிக்கவுள்ளது – திருமாவளவன்

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
thirumavalavan


சேலம் – சென்னை இடையிலான எட்டுவழிச்சாலையை, விவசாயிகள், பொதுமக்கள் எதிர்த்து வருகின்றனர். அதிமுக அரசாங்கமும், மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசாங்கமும் சாலையை அமைத்தே தீருவது என்கிற முடிவில் பணியாற்றி வருகின்றனர். இந்த சாலை அமைவதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 17ந்தேதி மாலை திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைச்செல்வன் கலந்துக்கொண்டு உரையாற்றினர்.
 

 

 


திருமாவளவன் பேசும்போது, யாருக்காக இந்த எட்டுவழிச்சாலை?, 5 மாவட்ட மக்கள் யாரும் எட்டுவழிச்சாலை கேட்கவில்லை. மக்கள் கேட்காத போது இந்த சாலை போடப்படுவது கார்ப்பரேட்க்காக. இது கார்ப்பரேட் சாலை. இந்த சாலையில் ஒரு கி.மீக்கு ஒரு டோல்கேட் வரும் அளவுக்கு இதனை தனியார் பராமரிக்கப்போகிறார்கள். சென்னை டூ மதுரையோ, சென்னை டூ கன்னியாகுமரியோக்கோ இவ்வளவு பெரிய சாலை அமைக்காமல் சேலத்துக்கு அமைக்கப்படுவதன் நோக்கம் என்ன ?.
 


இது முழுக்க முழுக்க ஜிண்டால் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் சேலம் முதல் திருவண்ணாமலை வரையுள்ள மலைகளில் உள்ள கனிமவளங்களை வெட்டி எடுத்துச்செல்லவே இந்த சாலை போடப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 20 சதவிதம் கமிஷன் என்றாலும் 3 ஆயிரம் கோடி வரை முதல்வர் எடப்பாடி குடும்பம் கொள்ளையடிக்கவுள்ளது. இங்கு வெட்டியெடுக்கப்படும் கனிமங்களை கப்பல் வழியாக ஏற்றுதி செய்ய எண்ணூர் துறைமுகத்தை 50 ஆயிரம் கோடியில் மேம்படுத்தும் வேலைகள் நடைபெறவுள்ளன. கடலுக்கு அடியிலும் துறைமுகப்பணிகள் நடைபெறுகின்றன.
 


இந்த சாலை போடுவதற்கு பதில் கிராமப்புறங்களை மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளோடு இணையுங்கள். நாட்டில் கிராமங்கள் சாலை வசதி கூட இல்லாமல் உள்ளன. ஆயிரக்கணக்கான கிராமங்கள் சுடுகாட்டுப்பாதையில்லாமல் உள்ளன. அதை செய்யாத அரசு, மக்கள் கேட்காத இந்த சாலையை போடுகிறது.

 

 



இந்த சாலையை விடுதலை சிறுத்தைகள் ஏன் எதிர்க்கிறது எனக்கேட்கலாம். எங்கள் மக்களிடம் நிலங்களில்லை. ஆனால் நாங்கள் நிலம் வைத்திருப்பவர்களிடம் வேலை செய்கிறோம். நிலங்கள் இருந்தால் தானே வேலை செய்ய முடியும், எங்கள் குடும்பத்தை காப்பாற்ற முடியும். நிலமே இல்லாதபோது எங்களுக்கு எப்படி வேலை வழங்குவார்கள். அதனால் தான் எதிர்த்து போராடுகிறோம். இதன் மூலம் நாங்கள் எங்கள் மக்களுக்காக மட்டும் போராடவில்லை. நிலங்களை இழக்கும் பிற சாதி மக்களுக்காகவும் போராடுகிறோம் என்றார். இந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்துக்கொண்டனர். கணிசமான அளவில் பெண்களும் பங்கேற்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“திமுகதான் எதிர்க்கட்சி என்பதுபோல் மோடி பிரச்சாரம் செய்கிறார் - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Thirumavalavan alleges Modi is campaigning as if the DMK is the opposition

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செவ்வாய்க் கிழமை(16.4.2024) சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பு.முட்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கி 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்களிடம் திருமாவளவன் பேசுகையில், “இந்தத் தேர்தலில், நரேந்திர மோடியின் நாசகரமான ஆட்சியை வீழ்த்த தளபதி மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியும் வியூகம் அமைத்து களமாடி வருகின்றனர். பாஜக விற்கு எதிரான வியூகம் அமைத்து, பல்வேறு கட்சிகளை  ஒருங்கிணைத்து  இன்று வலுவான தேர்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார். காங்கிரஸுக்கு பதிலாக திமுகதான் தனது எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயே டேரா போட்டு தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். கேஸ் விலை உயர்வு மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல்  சாதிய மோதல்கள் அதிகரிக்கவும் மோடி தான் காரணம். மோடி  மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  ரேசன் கடை இருக்காது. 100-நாள் வேலைத்திட்டம் இருக்காது” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன்,  திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன், திமுக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் விஜய் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.