Skip to main content

“பாஜக ஆண்டது போதும்; மக்கள் மாண்டதும் போதும்” - முதல்வர் ஸ்டாலின்

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Chief Minister Stalin campaign in Tiruvannamalai in praise of BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்தத் தேர்தல் களம் இரண்டாவது விடுதலை போராட்டம். இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்த இடம் திருவண்ணாமலை. திருவண்ணாமலையையும் திமுகவையும் பிரிக்க முடியாது. பாஜக ஆண்டது போதும்; அதனால் மக்கள் மாண்டதும் போதும். பாஜகவை இந்த முறை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.  பொய் புரளியை கிளப்பி வாக்கு வாங்க நினைக்கிறார் பிரதமர். இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டும்.

பிரதமர் மோடி குழப்பத்தில் இருக்கிறார்; அவரது குழப்பம் ஜூன் மாதத்தில் தெரிந்துவிடும். சமீபத்தில் பிரதமரின் ஒரு பேட்டி பார்த்தேன். ஆனால் அதில் அரசின் சாதனையாக  எதையும் பிரதமர் கூறவில்லை. தமிழ்நாட்டுக்கு செய்த சிறப்பு திட்டம் என்ன என்று தொடர்ந்து கேட்கிறேன்; இதுவரை பிரதமர் கூறவில்லை.

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மோடி உருட்டுகிறார். தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதி தர முடியாது என்று நக்கலாக பதில் சொன்னார் நிர்மலா சீதாராமன். மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதியை நிர்மலா சீதாராமன் பிச்சை என கூறினார். வெள்ள சேதத்தை பார்வையிட நிர்மலா சீதாராமன் வந்தார்; ஆனால் நிதி வரவில்லை.  மக்களுக்கு வழங்கப்படும் வெல்ல நிவாரண நிதியை நிர்மலா சீதாராமன் பிச்சை என கூறினார்.

வெளிநாட்டு வங்கிகளில் மாநில அரசு வாங்கிய கடனை ஒன்றிய அரசு தந்ததாக நிர்மலா சீதாராமன் பொய் சொன்னார். ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் கந்து வட்டிக்காரர் போல் கணக்கு கேட்கிறார் நிர்மலா சீதாராமன். பிரதமர் மாதிரியே நிமலா சீதாராமனும் வாயாலேயே வடை சுடுகிறார்.

தேசிய பேரிடர் நிதியில் இருந்து 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை கேட்டோம். கரகாட்டக்காரன் பட வாழைப்பழ காமெடி போல என்டிஆர்எப் நிதியை கேட்டால் எஸ் டி ஆர் எஃப் நிதியை கொடுத்து  இதுதான் என்கிறார். பேரிடர் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் என்டிஆர்எப் ஒதுக்கப்பட வேண்டும். மத்திய அரசிடம் பணம் உள்ளது; ஆனால் தமிழ்நாட்டிற்கு கொடுக்கத்தான் அவர்களுக்கு மனமில்லை. மத்தியில் ஜனநாயகம் மலர இந்தியா கூட்டணிக்கு வாக்களிங்கள். நாடும் நமதே நாற்பதும் நமதே” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.