Skip to main content

தமிழ்நாடு முதல்வர் அறிவித்ததுபோல் புதுச்சேரி முதல்வரும் அறிவிக்க வேண்டும் - புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ. கோரிக்கை..!

Published on 02/07/2021 | Edited on 02/07/2021

 

The Chief Minister of Pondicherry should announce as announced by the Chief Minister of Tamil Nadu

 

தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு ஜே.சி.ஐ. பாண்டிச்சேரி மெட்ரோ கிளை, வில்லியனூர் வாஞ்சிநாதன் வாலண்டீர் யூத் கிளப், வாசவி கிளப் ஆஃப் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி, வனிதா கிளப் ஆஃப் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி ஆகிய பொதுநல அமைப்புகள் இணைந்து கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, அவர்களைக் கௌரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. 

 

இந்த நிகழ்ச்சிக்கு ஜே.சி.ஐ பாண்டிச்சேரி மெட்ரோ கிளை இயக்கத்தின் தலைவர் புகழேந்தி தலைமை ஏற்க, வில்லியனூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மருத்துவர்களைக் கவுரவித்துப் பேசினார். அவர் பேசுகையில், "எப்போதும் மருத்துவர்களின் பணி மக்களின் உயிரைக் காக்கக் கூடியதாக இருக்கும். அதுவும் இந்தக் கரோனா காலக்கட்டத்தில் மருத்துவர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து சிறப்பாக பணியாற்றி, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். 

 

அவர்களின் சேவையால்தான் தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளது. எனவே மருத்துவர்களைக் கவுரவிக்க வேண்டியது ஆட்சியில் உள்ளவர்களின் கடமை. இதை உணர்ந்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாத காலத்திற்கு தமிழ்நாடு மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இதரப் பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவித்து வழங்கியுள்ளார். அத்துடன் கரோனா சிகிச்சையின்போது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்குத் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். 

 

இதைப் புதுச்சேரி மருத்துவர்களுக்கும் அமல்படுத்த திமுக வலியுறுத்தியது. ஆனால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே புதுச்சேரி முதல்வர், மருத்துவர்களைக் கவுரவிக்கும் வகையிலும், அவர்களது தியாகத்தைப் போற்றும் வகையிலும் தமிழ்நாடு முதல்வர் மருத்துவர்களுக்கு அறிவித்த அனைத்துச் சலுகைகளையும் அறிவிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

 

இந்நிகழ்வில் ஜே.சி.ஐ. நிர்வாகிகள் வெங்கடேசன், சுந்தரவடிவேல், கதிரவன், விநாயகம், சரவணன், ராமன், வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்ற நிறுவனர் ராமன், தலைவர் முருகன், வாசவி சங்கம் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி தலைவர் விஜயன், திமுக மாநில இளைஞர் அணி அமைப்பாளர் முகமது யூனுஸ், தொகுதி அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் சபரி, மந்திரகுமார், மனோகர், ஹாலித், ஐடி விங் அயூப், மன்சூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.