Skip to main content

எம்.எல்.ஏ க்கள் கைது! சி.பி.ஐ. அலுவலகத்தில் மம்தா! மேற்கு வங்கத்தில் பதட்டம்!

Published on 17/05/2021 | Edited on 17/05/2021

 

 Chief Minister Mamata Banerjee complains to Police Commissioner

 

மேற்கு  வங்க அமைச்சர்கள் இருவரை அதிரடியாக இன்று (17.5.21) கைது செய்திருக்கிறார்கள் மத்திய மோடி அரசின் சி.பி.ஐ. அதிகாரிகள். இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து சி.பி.ஐ. அலுவலகத்தில் போர்க்குரல் உயர்த்தியிருக்கிறார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

 

மேற்கு வங்க தேர்தலில் மம்தாவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தலைவர்கள் எவ்வளவோ போராடிப் பார்த்தனர். ஆனால், முந்தைய தேர்தலைவிட அதிக இடங்களில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தேடி தந்தனர் வங்காள மக்கள். மிக அரிதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் முதல்வரானார் மம்தா.

 

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட தோல்வி பாஜகவினரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. கடந்த 2017-ல் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக நடந்த நாரதா ஸ்டிங் ஆப்ரேசனில், மம்தா கட்சியைச் சேர்ந்த சுப்ரதா முகர்ஜி, பிர்ஹத் ஹக்கீம், மதன் மித்ரா ஆகியோர் லஞ்சம் பெற்ற போது சிக்கினர். அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

தற்போது மம்தாவின் அமைச்சரவையில் சுப்ரதா முகர்ஜி, பிர்ஹத் ஹகீம் இருவரும் அமைச்சர்களாக இருக்கின்றன.  மதன் மித்ரா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்த நிலையில்தான், 2017-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மேற்கண்ட மூவரையும் இன்று அதிரடியாகக் கைது செய்திருக்கிறது சி.பி.ஐ.  அவர்களைக் கைது செய்ய மேற்கு வங்க ஆளுநர்  ஜெகதீப் தங்கரிடம் அனுமதி பெற்றுள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள். 

 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களையும், எம்.எல்.ஏ. வையும் சி.பி.ஐ. கைது செய்துள்ள சம்பவம், தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, தனது அமைச்சர்களையும் கட்சி எம்.எல்.ஏ.வையும் கைது செய்ததை அறிந்து கோபமான முதல்வர் மம்தா, தனது இல்லத்திலிருந்து கிளம்பி, சி.பி.ஐ. அலுவலகத்திற்குச் சென்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் குதித்தார். கட்சி தொண்டர்களும் சி.பி.ஐ. க்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர்.

 

ஆர்ப்பாட்டம் செய்த முதல்வர் மம்தா, “மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறது சி.பி.ஐ.  மாநில அமைச்சர்களையும் எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்வதாக இருந்தால் சட்டமன்ற சபாநாயகரின் அனுமதியைப் பெற வேண்டும். சபாநாயகரின் அனுமதியைப் பெற வேண்டும் என்கிற சட்டத்தை உதாசீனப்படுத்தி விட்டு, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று கைது செய்கிறீர்கள் என்றால், என்னையும் கைது செய்யுங்கள்” என்று சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஆக்ரோஷமாகக் குரல் எழுப்பினார். 

 

இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாகியுள்ள நிலையில், அமைச்சர்களை ஏன் கைது செய்தோம் என சி.பி.ஐ. ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ஆனால், அந்த அறிக்கையை மாநில அரசு ஏற்கவில்லை. இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் வேகம் காட்டினர். இதனையறிந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சி.பி.ஐ. அலுவலகத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர்.

 

இதனால் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு கெடும் சூழல் உருவாவதாகவும், அதனைக் கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் முயற்சிக்க வேண்டும் என்றும் மம்தாவுக்கு உத்தரவுப் பிறப்பித்திருக்கிறார் கவர்னர். ஆனால், இதனைப் புறந்தள்ளிய மம்தா பானர்ஜி, தனது அமைச்சர்களையும் எம்.எல்.ஏ.வையும் சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொல்கத்தா காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். இதனால், மேற்கு வங்கத்தில் பதட்டமான சூழல் அதிகரித்துள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“காங்கிரசிற்கு ஒரு வாக்குக்கூட கிடைக்காது” - மம்தா பானர்ஜி அதிரடி பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Mamata Banerjee speech on Congress won't get a single vote in west bengal

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொண்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. வரும் 26ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. 

அதன்படி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று (24-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “மேற்கு வங்கத்தில் 26,000 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களிடமிருந்து அல்ல, எந்த அரசாங்க ஊழியரிடமிருந்தும் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது. உச்சநீதிமன்றத்தில் இருந்து நீதி கிடைக்கும் என இன்னும் நான் நம்புகிறேன்.

பாஜக உயர் நீதிமன்றத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். சி.பி.ஐயை விலைக்கு வாங்கியுள்ளனர். என்.ஐ.ஏ.வை வாங்கியுள்ளனர். பி.எஸ்.எப்-ஐ விலைக்கு வாங்கியுள்ளனர்.  தூர்தர்ஷனின் நிறத்தை காவி நிறமாக்கி விட்டார்கள். அதில், பாஜக மற்றும் மோடியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். அதைப் பார்க்காதீர்கள். புறக்கணிக்க வேண்டும்” என்று கூறினார்.