தமிழக அரசின் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி ரூ.1000 த்துடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தினை சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்,சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் துவக்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், கொள்கை பரப்பு துணை செயலாளர் பு.தா.இளங்கோவன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.