Skip to main content

"பாஜக காங்கிரஸ் கட்சியைக் கண்டு பயப்படுகிறது" - முதல்வர் பூபேஷ் பாகல் 

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

chhattisgarh cm bhupesh baghel talks about ed searching  

 

சட்டிஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி வரி ஊழல் மற்றும் பண மோசடி  வழக்கு குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி  வரும் நிலையில், சட்டிஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 

பிலாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேவேந்திர யாதவ், சட்டிஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ராம் கோபால் அகர்வால் உள்ளிட்ட  இன்னும் சிலருக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.  விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இந்த சோதனை குறித்து தெரிவிக்கையில், "வழக்கு தொடர்பாக ஊழல் மற்றும் பண மோசடியால் பயனடைந்தவர்கள் என்ற அடிப்படையில் சோதனை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

 

சட்டிஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் அமலாக்கத்துறையினர் சோதனை குறித்து தெரிவிக்கையில், "காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொள்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது. காங்கிரஸ் கட்சி ஏதாவது முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளும் போது எல்லாம் இது போன்ற சோதனை நடத்தப்படுகிறது. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு காங்கிரஸ் கட்சியை கண்டு பயப்படுகிறது. ராகுல்கந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டபோது பதற்றமடைந்த பாஜக தற்போது ராய்ப்பூரில் நடைபெற உள்ள தேசிய மாநாட்டை கண்டு அச்சம் அடைந்துள்ளது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக ஒன்றிய அரசு பல்வேறு ஒன்றிய அமைப்புகளை தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருகிறது" என்றார்.  காங்கிரஸ் கட்சி பிரமுகர்களின் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையானது காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சட்டீஸ்கர் மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.