அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதற்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகிலுள்ள செய்யூரில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமான விஷமிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது தமிழகத்தில் தொடர்கதையாகி வருவதைத் தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினர் உரிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்'' எனக் கூறியுள்ளார்.