Skip to main content

அமமுக வேட்பாளருக்கு நெஞ்சுவலி; பதட்டத்தில் டி.டி.வி!

Published on 22/03/2021 | Edited on 22/03/2021

 

Chest pain for an aspiring ammk candidate

 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில், அமமுக சார்பில் போட்டியிடும் எஸ்.காமராஜ், திருவாருர் தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் நசிமாபானு, நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் ராஜேந்திரன் மற்றும் திருத்துறைப்பூண்டி மக்கள் அரசு கட்சி வேட்பாளர் ரஜினிகாந்த் ஆகியோரை ஆதரித்து பெரியார் சிலை முன்பு டி.டி.வி தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொள்வார் என பொதுமக்களை திரட்டியிருந்தனர் அக்கட்சியினர். மன்னார்குடியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் காலம் கடந்து வந்து பொதுமக்களிடம் பேசாமல் சென்றதால் பொதுமக்கள், தொண்டர்கள் என அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். அப்போது, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். காமராஜ் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அங்கு பலமான கட்சிகளான திமுக, அதிமுகவினர் கூட்டும் கூட்டத்தைத்தாண்டி மக்களைத் திரட்டி அதிரவிட்டிருந்தனர் அமமுகவினர். திருவாரூர் மாவட்டம் முழுவதுமே அமமுக மா.செவான எஸ்.காமராஜிக்கு ஆதரவாளர்கள் அதிகம். அவர்கள் அனைவருமே மாஸ் காட்டுவதற்காக மன்னார்குடியை திரட்டி அதிமுக, திமுக வேட்பாளர்களை மிரளவிட்டிருந்தனர். இந்நிலையில், மாலை 6 மணிமுதல் காத்திருந்த பொதுமக்களுக்கு இளைப்பாறும் விதமாக ஆடல்பாடல் நிகழ்ச்சிகள், ஆடல்பாடல் நிகழ்ச்சிகளுக்கு இடையே மக்கள் தலைவர் டிடிவி ‘இதோ வந்துவிட்டார், அதோ வந்துவிட்டார், பத்து நிமிடத்தில் வந்துவிடுவார்’ என பாடலுக்கு இடையிடையே விளம்பரம் செய்துகொண்டிருந்தனர். 

 

Chest pain for an aspiring ammk candidate

 

அதே நேரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்குப் பிரச்சாரம் செய்யச் சென்ற டி.டி.வி. தினகரன், குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் கூடியிருந்த தொண்டர்களும், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து செல்ல ஆரம்பித்துவிட்டனர். இதற்கிடையில், இரவு 10.12 மணிக்கு மேல் பிரச்சார மேடைக்கு வந்தார் டிடிவி. தினகரன். தேர்தல் பரப்புரை நேரம் முடிந்துவிட்டதால், பொதுமக்களிடமும், தொண்டர்களிடமும் பேசமுடியாமல் போனதால், கை அசைத்துவிட்டு சென்றுவிட்டார். இதனால் அமமுகவின், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டதோடு, தனது சொந்த ஊரிலேயே பேச முடியாமல் போய்விட்டாரே என்கிற வருத்தம் அமமுகவினர் மத்தியில் ஏற்பட்டது.

 

இந்தச் சூழலில் அமமுக மா. செவான எஸ். காமராஜிக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து எஸ்.காமராஜிக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம், “திருவாரூர் மாவட்டத்தில் ஆளும் கட்சி அமைச்சரான ஆர்.காமராஜிக்கு நிகரான ஆதரவாளர்களை வைத்திருப்பவர் அமமுக மாவட்டச் செயலாளர் எஸ். காமராஜ். இருவருக்குமே சொந்த ஊர் மன்னார்குடி என்றாலும் எஸ். காமராஜ் மீது உள்ள அச்சத்தால், மன்னார்குடியில் போட்டியிடாமல் நன்னிலத்தை தேர்வு செய்தார் அமைச்சர் காமராஜ். அந்தளவிற்கு செல்வாக்கு உள்ளவருக்கு இப்படிச் சங்கடமான சூழல்வரும்போது மனம் வேதனைபடத்தானே செய்யும், அவருக்கு உண்டான மன அழுத்தம் நெஞ்சுவலியாக மாறிடுச்சி, தற்போது டி.டி.வி. தினகரனுக்கு பிரதான தளபதிகளாக இருப்பவர்களில் காமராஜும் ஒருவர். அவருக்கு இப்படி நடந்தது டி.டி.வி’யை சங்கடப்படவைத்துள்ளது” என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.