Advertisment

"தொண்டனாக இருந்து பெரிய பதவியை அடைந்துள்ளேன்"- துரைமுருகன் பேட்டி!

chennai anna arivalayam duraimurugan press meet

தி.மு.க.பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் அண்ணா அறிவாலயத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும், தி.மு.க. அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ்.பாரதியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

Advertisment

chennai anna arivalayam duraimurugan press meet

வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், "தி.மு.க.வில் சாதாரண தொண்டனாக இருந்து பொதுச்செயலாளர் என்ற பெரிய பதவியை அடைந்துள்ளேன். அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், க.அன்பழகன் இருந்த பதவியில் நானும் போட்டியிடுகிறேன் என்பதே சிறப்புமிக்கது. பொதுச்செயலாளர் பதவிக்கு உண்டான அதிகாரங்கள் எதுவும் மாறவில்லை" என்றார்.

Advertisment

தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

anna arivalayam DMK PARTY duraimurugan PRESS MEET
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe