Skip to main content

''கார் ஓசி, காரில் ஏசி ஓசி... எல்லாமே ஓசி...''-செல்லூர் ராஜு பேட்டி

Published on 02/10/2022 | Edited on 02/10/2022

 

"Car is OC, car AC is OC...everything is OC"-Sellur Raju interview

 

மக்கள் திட்டங்களை அமைச்சர்களே கொச்சைப்படுத்துவது முறையல்ல என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''போக்குவரத்து துறையை பொறுத்த அளவிற்கு முதன்மைச் செயலாளர், அமைச்சர்களை அழைத்து வைத்து உடனடியாக முதல்வர் பேசியிருக்க வேண்டும். அரசு பேருந்துகளில் மதுரையிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு எவ்வளவு வாங்குகிறோம். அதே பயணத்திற்கு தனியார் பேருந்துகளில் எவ்வளவு வாங்குகிறார்கள். அவர்களுக்கு எப்படி கட்டுபடியாகிறது. அரசு சொகுசு பேருந்துகளை நடத்துகிறது, குளிர்சாதன பேருந்துகளை நடத்துகிறது. இதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறோம் என்று கேட்க வேண்டும். ஆனால் இதுவரை முதல்வர் அது மாதிரி ஒரு நடவடிக்கை எடுத்ததாக எங்களுக்கு தெரியவில்லை. எல்லா இடத்திலும் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதைத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

 

இது விளம்பர ஆட்சி, மக்களுக்கான ஆட்சியாக இது தெரியவில்லை. எல்லா அமைச்சர்களுக்கும் வாய் கொழுப்பு அதிகமாயிருச்சு. பாண்டியராஜன் நடித்த ஒரு படம் இருக்கிறது 'வாய்க்கொழுப்பு' என்று, எதிலும் வாய் துடுக்காகப் பேசிவிட்டு போகிறார்கள். அதுபோன்று நிறைய அமைச்சர்கள் இப்பொழுது வாய் கொழுப்பாக ஏதாவது பேசி இன்னைக்கு மக்கள் மத்தியில் இந்த அரசுக்கு இருந்த கொஞ்சநஞ்ச பேரையும் கெடுத்துக் கொண்டார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. சமீப காலமாக உங்களுக்கெல்லாம் தெரியும் கட்டணம் இல்லாத பேருந்தில் செல்வதற்கு மக்கள் அச்சப்படுகிறார்கள். நாங்கள் கட்டணத்தை கொடுக்கிறோம் எங்களுக்கு உரிய மரியாதையை கொடுங்கள் என்று பாட்டி முதல் மாணவிகள் வரை கேட்பதற்கு ஆரம்பித்து விட்டார்கள். இதனால்தான் ஜெயலலிதா அவருடைய ஆட்சியில் எதையும் இலவசம் என்று சொல்லவில்லை. விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், விலையில்லா சைக்கிள், விலை இல்லா பரிசு பெட்டகம் என்று சொன்னார்கள். அதை இலவசம் என்று சொன்னால் மக்களை கொச்சைப்படுத்துவதாக அமைகிறது. அமைச்சர்களாக இருந்தாலும் எல்லோரும் மக்களுடைய பணத்தில் தான் அனுபவிக்கிறோம். விமான டிக்கெட் ஓசி, கார் ஓசி, காரில் இருக்கின்ற ஏசி ஓசி, டிரைவர் ஓசி, டீசல், பங்களா ஓசி, எல்லாமே ஓசி இப்படி ஓசி ஓசியாக அனுபவித்துவிட்டுஇன்று மக்களுக்கான இலவச திட்டங்களை கொச்சைப்படுத்துவது முறையல்ல'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.