Skip to main content

கழிவறையில் ஏசி, பாத்ரூம் ஏசி, கண்ட இடமெல்லாம் ஏசி... சி.எம்.க்கு போன் போடட்டுமா? ஓசி-யில் ஆட்டம் போட்ட அதிமுக பிரமுகர்

Published on 23/07/2018 | Edited on 27/08/2018
ac


விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துருவை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சதீஷ்குமார் வயது (36). இவர் அதிமுக வானூர் ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கு சொந்தமான வீடு துருவை கிராமத்தில் உள்ளது. இந்நிலையில் இவரது வீட்டில் அனைத்து அறைகளிலும் குளிர்சாதன ஏசி பொறுத்தப்பட்டுள்ளது. 

 

 


ஏசி 24 மணி நேரமும் பயன்படுத்தி வருவதால் மின்கட்டணம் அதிக அளவில் வருகிறது. இதனை குறைப்பதற்காக ஏசியை மின் மீட்டர் இணைப்பில்  பொருத்தப்படாமல், அதனை தவிர்த்து சட்டத்திற்கு புறம்பாக நேரடியாக திருட்டுத் தனமாக பல மாதங்களாக தொடர்ந்து திருட்டு மின்சாரத்தை பயண்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனிடையே மின்துறை அதிகாரிகள் கணக்கு எடுத்தனர். அதில் ஏற்கனவே இருந்த மின்கட்டணத்தைவிட குறைவாக மின் மீட்டர் காட்டியதால் சந்தேகம் எழுந்துள்ளது.

 

 

 

 


இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த திருச்சிற்றம்பலம் துணை மின்நிலைய மின்துறை அதிகாரிகள், விழுப்புரம் மின்துறை தடுப்பு பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து துருவை கிராமத்தில் சதீஷ்குமார் வீட்டில் திடீர் என மின்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது திருட்டுத்தனமாக மின்சாரத்தை திருடி பல மாதங்களாக பயண்படுத்தி வந்தது தெரியவந்தது. 

 

 

 

 


மின்துறை அதிகாரிகள் சதீஷ்குமாரிடம் விளக்கம் கேட்டபோது, "நான் ஆளுங்கட்சி அதிமுக ஒன்றிய செயலாளர், வானூர் சட்டமன்றமே என் கட்டுப்பாட்டில் உள்ளது. எனக்கு சி.எம் எடப்பாடியை தெரியும், அமைச்சரை தெரியும், எம்எல்ஏ என் பாக்கெட்டில் இருக்கார். அமைச்சரை விட்டு உங்களுக்கு போன் பேசுனுமா? உங்களை  எல்லாரையும் தண்ணில்லா காட்டுக்கு மாத்திடுவேன். இந்த இடத்தை விட்டு ஓடிடுங்க" என்று மின்துறை  அதிகாரிகளிடம் மிரட்டும் தோணியில் அதிகாரியை கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. 

இதனை ஒரு பொருட்டாகவே மின்துறை பறக்கும் படை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. உயர்அதிகாரிகள் உத்தரவின் பேரில் அபாரத தொகை விதித்தனர். அபாரததொகை கட்டாயம் கட்ட வேண்டும். கட்ட தவறினால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் இதே கிராமத்தில் சதீஷ்குமார் உள்ளிட்ட 5 வீடுகளில் மின்துறை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததில் திருட்டுத்தனமாக மின்சாரத்தை திருடி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவர்களுக்கும் அபாரதத் தொகை விதித்தனர். மின்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.