தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்காக கட்சி சார்ந்த வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில், இந்நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட 112வது வார்டு மாமன்ற உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிடும் எலிசபெத் அகஸ்டின் பாபு, வெங்காயம் விற்று பிரச்சாரம் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.